கூத்தாநல்லூர் சங்கத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள், கடந்த 20ஆம் தேதி சனிக்கிழமை மத்திய தீயணைப்பு நிலையத்துக்குச் சென்று அங்கு கற்றல் பயணத்தை மேற்கொண்டன.
ஹில் ஸ்த்ரீட்டில் அமைந்துள்ள மத்திய தீயணைப்பு நிலையம் சிங்கப்பூரின் ஆகப் பழமையான தீயணைப்பு நிலையமாகும். இன்றும் அது செயல்பட்டு வருகிறது.
மத்திய தீயணைப்பு நிலையத்தின் செயல்பாடு பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் விளக்கினர்.
உதவித் தொலைபேசி எண்ணான 995க்கு அழைப்பு வந்து, தங்கள் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்போது அதிகாரிகள் செய்யும் அனைத்தையும் கைவிட வேண்டும் என்று நிலையத்தைச் சேர்ந்த ரோட்டா தளபதி எல்.டி. மெலிசா வருகையாளர்களிடம் தெரிவித்தார்.
கூத்தாநல்லூர் சங்க உறுப்பினர் களுக்கு குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்சுகள், தீயணைப்பு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றில் அமர்ந்து அவற்றின் சில சாதனங்களைச் சோதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிறுவர்களும் ஆம்புலன்சு களுக்குள் சென்று அவற்றை ஆராய்ந்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் உள்ள பிரபலமான சறுக்குக் கம்பங்களில் சரிவதைப் பார்த்து வருகையாளர்கள் மகிழ்ந்தனர்.
தீயணைப்பு வீரர்கள், குடிமைத் தற்காப்பு அதிகாரிகளின் ஆடை களையும் தனிப்பட்ட பாதுகாப்புச் சாதனங்களையும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.
இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் தானியங்கிக் கருவியைப் பயன்படுத்தவும் வாய்வழி மூச்சளித்தல் சிகிச்சை அளிக்கவும் கூத்தாநல்லூர் சங்கத்தினர் கற்றுக்கொண்டனர்.
மூத்த தீயணைப்பு வீரரும் உயிர்காக்கும் நாய் பயிற்சியாளருமான திரு சேகர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மரபுடைமைக் காட்சியகத்தையும் அவசரகால தயாரிப்பு நிலையத்தையும் கூத்தாநல்லூர் சங்கத் தினருக்குச் சுற்றிக் காட்டினார்.
சுமார் இரண்டு மணிநேரத்துக்கு அவர்களது குடும்பத்தாருடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
வரும் மாதங்களில் குடிமைத் தற்காப்புப் படையின் வேறொரு தீயணைப்பு நிலையத்திற்குச் செல்ல கூத்தாநல்லூர் சங்கம் திட்டமிட்டு வருகிறது.
தீயணைப்பு நிலையங்களுக்கு வருகைதர விரும்பும் குழுக்கள் அதற்கு பதிந்துகொண்டு சனிக்கிழமைகளில் செல்லலாம். மேல்விவரத்துக்கு: https://www.scdf.gov.sg/home/community-volunteers/visit-scdf-establishments
செய்தி: கூத்தாநல்லூர் சங்கம்

