தனிமையில் இருப்பது வேலைவாய்ப்பைப் பறித்துவிடக்கூடும்

தனிமையில் இருப்பது வேலைவாய்ப்பைப் பறித்துவிடக்கூடும்

2 mins read
6c9300c7-3105-441f-a11a-0a733804c497
-

தனி­மையை உணர்­வது எதிர்­கால வேலை­வாய்ப்­பைப் பெரி­தும் பாதிக்­க­லாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறு­கிறது.

அடிக்­கடி தனி­மை­யில் இருப்­பது­போல் உணர்­வ­தா­கக் கூறு­பவர்­கள், பிற்­கா­லத்­தில் வேலையை இழக்­கும் வாய்ப்­பு­கள் அதி­கம் என்று அந்த ஆய்வு சொல்­கிறது.

இங்­கி­லாந்­தின் எக்­செட்­டர் பல்­கலைக்­க­ழக ஆய்­வா­ளர் குழு மேற்­கொண்ட இந்த ஆய்வு குறித்த கட்­டுரை 'பிஎம்சி பொதுச் சுகா­தார' சஞ்­சி­கை­யில் வெளி­யாகி இருக்­கிறது.

வேலை­யின்றி இருப்­பது தனி­மை­யில் தள்­ளி­வி­ட­லாம் என்று முன்னைய ஆய்வு நிறு­வி­யி­ருக்­கிறது. இந்­நி­லை­யில், தனி­மை­யில் இருப்­பது வேலை­வாய்ப்­பில் பாதிப்பை ஏற்­ப­டுத்­துமா என்று இப்­போது ஆரா­யப்­பட்­டது.

இதன் தொடர்­பில் ஆய்­வுக் குழு­வின் தலை­வ­ரான நியா மோரிஸ் கூறு­கை­யில், "தனித்­தி­ருப்­ப­தும் வேலை­யின்றி இருப்­ப­தும் உடல்­நலத்­தி­லும் பொரு­ளி­ய­லி­லும் அஞ்­சத்­தக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்தி­வி­ட­லாம். அத­னால், தனித்­தி­ருப்­பதைக் குறைப்­பது வேலை­யின்­மை­யைக் குறைக்­கும்; வேலை­யில் இருப்­பது தனிமை உணர்­வைக் குறைக்­கும். இவற்­றின் விளை­வாக, உடல்­ந­லம், மன­ந­லம், வாழ்க்­கைத்­தரம் உள்­ளிட்ட பிற அம்­சங்­களும் மேம்­படும்," என்­றார்.

"ஆத­லால், தனி­மை­யில் இருப்­ப­தாக உணர்­வோ­ரின் நலத்­தை­யும் வாழ்க்­கைத்­த­ரத்­தை­யும் மேம்­ப­டுத்­தும் வகை­யில், அவர்­கள்­மீது நிறு­வனங்­களும் அர­சாங்­க­மும் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும். எங்­களது ஆய்வு பெரும்­பா­லும் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்பே இடம்­பெற்­றது. இந்­நி­லை­யில், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது அதி­க­மா­கி­யுள்ள நிலை­யில், பல­ரும் தனி­மை­யு­ணர்வை அனு­ப­வித்­து­வர அதிக வாய்ப்­புள்­ள­தால் இந்த விவ­கா­ரம் மேலும் மோச­மாகி இருக்­கக்­கூ­டும்," என்­றும் திரு­வாட்டி நியா கூறி­னார்.

ஆய்­வில் பங்­கேற்ற 15,000க்கும் மேற்­பட்­டோர் அளித்த தர­வு­களை ஆய்­வுக்­கு­ழு­வி­னர் பகுப்­பாய்வு செய்­த­னர்.

வயது, பாலி­னம், இனம், கல்வி, திரு­மண நிலை, குடும்ப அமைப்பு, குழந்­தை­கள், வட்­டா­ரம் போன்ற பல கார­ணி­களை ஆய்­வா­ளர்­கள் கருத்­தில்­கொண்­ட­னர்.

"தனிமை என்­பது நம்ப முடி­யாத அள­விற்கு, முக்­கி­ய­மா­ன­தொரு சமூ­கப் பிரச்­சி­னை­யாக விளங்­கு­கிறது. பெரும்­பா­லும் அது மன­நலத்­தி­லும் நல்­வாழ்­வி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் எனக் கரு­தப்­ப­டு­கிறது. ஆனால், அதன் தாக்­கம் பரந்த அள­வில் இருக்­க­லாம் என்­ப­தை­யும் அது தனி­ம­னி­தர்­களிடத்­தி­லும் பொரு­ளி­ய­லி­லும் எதிர்­ம­றைத் தாக்­கங்­களை ஏற்­படுத்­த­லாம் என்­ப­தை­யும் எங்­க­ளது கண்­டு­பி­டிப்­பு­கள் காட்­டு­கின்­றன. இது குறித்து மேலும் ஆராய வேண்டி இருக்­கிறது," என்று மூத்த ஆய்­வா­ள­ரான பேரா­சி­ரி­யர் அன் டோனிட்டா மெடினா லாரா கூறி­னார்.

"வேலையின்மை, தனிமை உணர்வை ஏற்படுத்தக்கூடும் என முன்னைய ஆய்வு மெய்ப்பித்துள்ள நிலையில், தனிமை உணர்வை அனுபவிப்பவர்கள், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் தங்களது வேலையை இழக்க வாய்ப்புள்ளதை முதன்முறையாக நாங்கள்தான் அடையாளம் கண்டுள்ளோம்," என்றார் ஆய்வாளர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபன் முய்க்கா மோட்டா.

இவ்விரு விவகாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு, ஒரு எதிர்மறைச் சுழற்சியை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.