செல்சி நிர்வாகிமீது குற்றச்சாட்டு

செல்சி நிர்வாகிமீது குற்றச்சாட்டு

1 mins read
ef8947f3-80a5-4bd6-88ee-263b1573d9f0
-

லண்­டன்: ஆட்ட நடு­வரின் நேர்மை குறித்­துக் கேள்வி எழுப்பி, காற்­பந்­தாட்­டத்­திற்கு அவப்­பெ­யர் தேடித் தரும் வகை­யில் நடந்­து­கொண்­ட­தாக செல்சி காற்­பந்­துக் குழு­வின் நிர்­வாகி தாமஸ் டுக்­கல் (படம்) மீது இங்­கி­லாந்­துக் காற்­பந்து சங்­கம் (எ­ஃப்ஏ) குற்­றச்­சாட்டு பதி­வு­செய்­துள்­ளது.

இம்­மா­தம் 14ஆம் தேதி செல்சி - டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழுக்­கள் மோதிய இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டம் 2-2 என்ற கோல் கணக்­கில் சம­னில் முடிந்­தது.

ஆட்ட நடு­வ­ரும் காணொளி உதவி நடு­வரும் தவ­றான முடி­வு­களை எடுத்­தது, ஸ்பர்ஸ் குழு­விற்கு உத­வும் வகை­யில் அமைந்­து­விட்­டது என்று போட்டி முடிந்­த­பின் டுக்­கல் சாடி­யி­ருந்­தார்.

களத்­தி­லேயே டுக்­க­லும் ஸ்பர்ஸ் நிர்­வாகி கோன்­டே­யும் வாக்­கு­வா­தம் செய்­த­தால் இரு­வருக்­கும் சிவப்பு அட்டை காட்­டப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.