வானிலை மாற்றமும் வாட்டும் வறட்சியும்

வானிலை மாற்றமும் வாட்டும் வறட்சியும்

3 mins read
bb5aff50-dee4-45d3-afb4-188d7411089e
(இடது படம்) யாங்ச ஆற்றில் நீர் வற்றி, பாளம் பாளமாக வெடித்துக் காணப்படும் அடிப் பகுதி, (வலது மேல்படம்) யாங்ச ஆற்றில் நீர் வற்றியதால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்டுள்ள புத்தர் சிற்பம், (நடுவில்) பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வறட்சியால் நீர் மட்டம் 14 மீட்டர் குறைந்து வறண்டு காணப்படுகிறது, ஈராக்கில் தண்ணீருக்குத் தவிக்கும் மக்கள். படங்கள்: இபிஏ, ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 4

சீனா­வில் ஆறு­கள், கிளை நதி­கள், ஏரி­கள் பல­வற்­றி­லும் நீரின் அளவு முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­விற்­குக் குறைந்­துள்­ளது. ஆற்­றுப்­படு­கை­கள், அவற்­றில் உள்ள பாறை­கள், ஆற்­றில் மூழ்­கி­யி­ருந்த சில நூறு ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய கற்­சி­லை­கள் எனப் பல­வும் புலப்­ப­டு­கின்­றன.

யாங்ச ஆற்­றி­லும் அதன் நீரோட்­டத்­தால் நிரம்­பிய டோங்­டிங் போன்ற பாசன ஏரி­க­ளி­லும் நீர் வற்றி நிலப்­பரப்பே பெரும்­பா­லும் காட்­சி­அளிக்கிறது.

பல பகு­தி­களில் காட்­டுத் தீச்­சம்­ப­வங்­கள், 45 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதி­க­மான வெப்­ப­நிலை ஆகி­யவை குறித்து எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு மின்­சா­ரத் தடை­யைத் தவிர்க்­கும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

பிரான்­சில் 1958ல் வானிலை நிகழ்­வு­க­ளின் பதிவு தொடங்­கிய காலத்­தில் இருந்து ஆக மோச­மான வறட்சி நில­வு­கிறது. வடக்கு இத்­தா­லி­யில் 70 ஆண்டு காணாத வறட்சி. அமெ­ரிக்­கா­வில் 43 விழுக்­காட்டு மாநி­லங்­களில் வறட்சி என்று எங்கு பார்த்­தா­லும் தண்­ணீர்த் தட்­டுப்­பாட்­டின் அவ­லக் குரல்­கள் ஒலிக்­கின்­றன. பொது­வில் ஐரோப்­பா­வில் 500 ஆண்­டில் இல்­லாத அளவு மோச­மான வறட்சி நில­வு­வதாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் கூட்டு ஆய்வு நிலை­யம் கூறி­யி­ருக்­கிறது.

இத்­தா­லி­யின் ஆகப் பெரிய நதி­யான போ, முக்கியமாக போக்குவரத்து நீர்ப் பாதையாக வர­லாற்­றின் ஏடு­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆறு­க­ளின் அர­சன் எனப்­படும் இந்த நதி­யில் இப்­போது கடும் வறட்­சி­யால் நீரின் அளவு மிக­வும் குறைந்­துள்­ளது. இரண்­டாம் உல­கப் போரின்­போது வீசப்­பட்ட வெடி­குண்­டு­கள் ஆற்­றுப்­ப­டு­கை­யில் காணப்­ப­டு­கின்­றன. கிட்­டத்­தட்ட 17 மில்­லி­யன் பேர் இந்த ஆற்­றின் கரை­யோ­ரத்­தில் வசிக்­கின்­ற­னர். நாட்­டின் கால்­ந­டை­களில் பாதிக்­கும் மேல் இதைச் சுற்­றி­யுள்ள வட்­டா­ரங்­களில் பேணப்­ப­டு­கின்­றன.

மிக மோச­மான வறட்­சியை முன்­னிட்டு இத்­தா­லிய அர­சாங்­கம் சென்ற மாதம் ஐந்து வட்­டா­ரங்­களில் நெருக்­கடி நிலையை அறி­வித்­தது.

மழை­யின் அளவு குறைந்­த­தும் உலக வெப்­ப­நிலை உயர்ந்து வரு­வதும் இதற்­கான முக்­கி­யக் கார­ணங்­கள் என்று கரு­தப்­ப­டு­கிறது. இது பரு­வ­நிலை மாற்­றத்­தின் தாக்­கம் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை என்று இத்­தா­லி­யப் பிர­த­மர் கூறி­ உள்­ளார்.

அண்டை நாடான பிரான்­சின் பெரும்­பா­லான பகு­தி­களில் தண்­ணீர்ப் பற்­றாக்­குறை. சோள விளைச்­சல் சென்ற ஆண்­டைக் காட்­டி­லும் 20 விழுக்­காடு குறை­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

போலந்­தில் ஏறக்­கு­றைய 99 விழுக்­காட்­டுப் பகு­தி­களில் கடு­மை­யான வறட்சி வாட்­டு­கிறது. ருமே­னி­யா­வின் முக்­கால்­வா­சிப் பகு­தி­யில் வறட்சி.

இங்­கி­லாந்­தில் 2025க்குள் சில ஆறு­களில் கோடைக்­கா­லங்­களில் நீரின் அளவு 80 விழுக்­காடு குறை­யக்­கூ­டும் என்­றும் வெப்­ப­நிலை 7 டிகிரி செல்­சி­யஸ் அதி­க­ரிக்­கும் என்­றும் ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். ஆப்­பி­ரிக்­கா­வி­லும் வறட்சி தலை­வி­ரித்­தா­டு­கிறது. இத­னால் எத்­தி­யோப்­பியா, சோமா­லியா, கென்­யா­வின் சில பகு­தி­கள் ஆகி­ய­வற்­றில் 18 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் கடும் பட்­டி­னி­யால் வாடு­கின்­ற­னர்.

உல­கின் பல பகு­தி­க­ளை­யும் வாட்­டும் வறட்­சி­யால் தண்­ணீர்த் தட்­டுப்­பாடு மட்­டு­மின்றி நீர்­வ­ழிப் போக்­கு­வ­ரத்து, நீர் மின்­சார உற்­பத்தி, பயிர் விளைச்­சல் போன்­ற­வை­யும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.

உல­கில் 2000ஆம் ஆண்­டுக்­குப் பிறகு வறட்சி ஏற்­படும் இடை­வெளி­யும் அது நீடிக்­கும் கால­கட்­ட­மும் ஏறத்­தாழ மூன்­றில் ஒரு பங்கு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வன அறிக்கை தெரி­விக்­கிறது.

உல­கெங்­கும் 229 மில்­லி­யன் ஏக்­கர் விளை­நி­லங்­களில் உள்ள பயிர்­களும் 130 மில்­லி­யன் மக்­களும் வறட்­சியை எதிர்­கொள்­வ­தாக மதிப்­ப­டப்­பட்­டுள்­ளது.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் விளை­வு­க­ளைத் தணிக்­கும் நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிப்­பதே இதற்­கான தீர்வு. இதேநிலை தொடர்ந்­தால் 2050க்குள் உல­கின் முக்­கால்­வாசிப் பகு­தி­கள் வறட்­சி­யால் வாட நேரி­டும் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது.