நாவல் மரத்தின் இலை, விதை, பட்டை, பழம் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
'ஆன்டி ஆக்ஸிடன்ட்' அதிகமாக நிறைந்திருப்பதால், இது மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் உணவாகக் கருதப்படுகிறது.
நாவல் பழத்தில் அதிகமான நார்ச்சத்து, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, மக்னீசியம் போன்ற சத்துகளும் நிறைந்திருக்கின்றன.ஆனால் இதில் கலோரி அளவு குறைவு. எனவே இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் தயங்காமல் உண்பதற்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.
இதில் அதிக அளவு வைட்டமின்-சி, இரும்புச் சத்து ஆகியவை இருப்பதால், உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்; ரத்த சோகை நோய் வராமல் காக்கவும் உதவும். உடல் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும் என்பது கூடுதல் நன்மை.
இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. நாவல் பழம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கின்றது.
இதில் இனிப்பின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதை உண்ணலாம்.
சிறுநீர்த் தொற்று ஏற்பட்டவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகலாம்.
தினமும் நாவல் பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். நாவல் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலால் துன்பப்படுவோருக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்கவும். எந்த உணவையும் போலவே நாவல் பழங்களை அளவோடு உண்டு வந்தால் அதன் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்.
தகவல், படம்: இணையம்

