கம்பன் விழாவில் சிறப்புப் பட்டிமன்றம்

கம்பன் விழாவில் சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் நடத்­தும் கம்­பன் விழா, வரும் சனிக்­கி­ழமை செப்­டம்­பர் 3ஆம் தேதி மாலை மணி 6 மணி முதல் 9 மணி வரை உம­றுப் புல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில் நடை­பெற உள்­ளது.

விழா­வில் 'ரோசஸ் ஆஃப் தி பீஸ் நிறு­வ­ன­ரும் நாடா­ளு­மன்ற நிய­மன உறுப்­பி­ன­ரு­மான திரு முக­மது இர்­ஷாத் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­வார்.

சிறப்பு அங்­க­மாக "இரா­ம­னுக்­குப் பெரி­தும் ஏற்­றம் தந்­த­வர்­கள் உடன்­பி­றந்த தம்­பி­யரா? (பர­தன், இலக்­கு­வன், சத்­து­ருக்­கன்) உடன்பிற­வாத் தம்­பி­யரா? (குகன், சுக்­கி­ரீ­வன், வீட­ணன்)" எனும் தலைப்­பில் பட்­டி­மன்­றம் நடக்கும். சிங்­கப்­பூர்ச் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக இணைப் பேரா­சி­ரி­யர் முனை­வர் ந. செல்­லக்­கி­ருஷ்­ணன் நடு­வ­ராக இருப்­பார்.

"உடன்­பி­றந்த தம்­பி­யரே" என்­னும் தலைப்­பில் முனை­வர் இரத்­தின வேங்­க­டே­சன் தலை­மை­யில் கண்­ணன் வைஷ்­ணவி, முனை­வர் ராஜி சீனி­வா­சன் ஆகி­யோர் வாதி­டு­வர். தலைப்­பை வெட்டி முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் வானதி பிர­காஷ், முனை­வர் க. இரா­ஜ­கோ­பா­லன் ஆகி­யோர் வாதி­டு­வர்.

கம்­பன் விழாவை ஒட்டி கம்­பன் கவி­தை­களில் மாண­வர் களுக்கு 'கஹூட்' இணை­யத்­த­ளம் வழி­யா­கப் புதிர்ப் போட்டி நான்கு பிரி­வு­க­ளாக நடத்­தப்­பட்­டது. போட்­டி­களில் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்கு விழா­வில் பரி­சு­கள் வழங்­கப்­படும்.