பாண்டியா அதிரடி

பாண்டியா அதிரடி

2 mins read
694fe8d2-04dc-4cc1-b7be-f70c66830f5f
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் சரிவிற்கு முக்கியக் காரணமாக விளங்கியதோடு, கடைசி நேரத்தில் பதற்றமின்றிப் பந்தடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த ஹார்திக் பாண்டியா. படம்: ஏஎஃப்பி -

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய்: இறு­தி­வரை பர­ப­ரப்­பாக இருந்த ஆட்­டத்­தில், பதற்றமின்றி ஆடி இந்­திய அணியை வெற்­றிப் பாதைக்கு அழைத்­துச் சென்­றார் ஹார்திக் பாண்­டியா.

இத­னை­ய­டுத்து, துபா­யில் நடந்­து­வரும் ஆசி­யக் கிண்ண டி20 கிரிக்­கெட் தொட­ரில் தனது முதல் ஆட்­டத்­தி­லேயே பரம எதி­ரி­யான பாகிஸ்­தானை ஐந்து விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் இந்­திய அணி தோற்­க­டித்­தது.

மொத்­தம் ஆறு அணி­கள் இரு பிரி­வு­க­ளா­கப் பங்­கேற்­கும் இத்­தொ­ட­ரில் இந்­தியா, பாகிஸ்­தான், ஹாங்­காங் அணி­கள் 'ஏ' பிரி­வி­லும் ஆப்­கா­னிஸ்­தான், பங்­ளா­தேஷ், இலங்கை அணி­கள் 'பி' பிரி­வி­லும் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த சனிக்­கி­ழமை நடந்த முதல் ஆட்­டத்­தில் ஆப்­கா­னிஸ்­தான், இலங்­கையை மிக எளி­தாக வெற்­றி­கொண்டது.

இந்­நி­லை­யில், கிரிக்­கெட் ரசி­கர்­கள் பேரா­வ­லு­டன் எதிர்­பார்த்த இந்­தியா-பாகிஸ்­தான் ஆட்­டம் நேற்று முன்­தி­னம் இரவு இடம்­பெற்­றது.

இந்­திய அணி­யில் இளம் விக்­கெட்­காப்­பா­ளர் ரிஷப் பன்ட்­டுக்­குப் பதி­லாக அனு­பவ வீர­ரான தினேஷ் கார்த்­திக்­கிற்கு வாய்ப்பு தரப்­பட்­டது.

பூவா தலை­யா­வில் வென்ற இந்­திய அணித்­த­லை­வர் ரோகித் சர்மா, முத­லில் தமது அணி பந்­து­வீ­சும் என அறி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து, பாகிஸ்­தான் அணி­யின் தொடக்­கப் பந்­த­டிப்­பா­ளர்­களாக அணித்­த­லை­வர் பாபர் ஆச­மும் முகம்­மது ரிஸ்­வா­னும் கள­மி­றங்­கி­னர்.

சிறப்­பாக விளை­யாடி ஓட்­டங்­க­ளைக் குவிப்­பார் என எதிர்­பார்க்­கப்­பட்ட பாபர் ஆசமை 10 ஓட்­டங்­களில் வெளி­யேற்றி அதிர்ச்சி அளித்­தார் இந்­திய அணி­யின் வேகப் பந்­து­வீச்­சா­ளர் புவ­னேஸ்­வர் குமார்.

'பவர் பிளே'வான முதல் ஆறு ஓவர்­களுக்­குள் பாகிஸ்­தான் மேலும் ஒரு விக்­கெட்டை இழந்­தது. தமது பந்­தில் சிக்­சர் விளா­சிய ஃபகர் ஸமானை ஆட்­ட­மி­ழக்­கச் செய்து, பழி­தீர்த்­துக்­கொண்­டார் இளம் வேகப் பந்­து­வீச்­சா­ள­ரான ஆவேஷ் கான்.

இப்­தி­கார் அக­மது (28), முகம்­மது ரிஸ்­வான் (43) இரு­வ­ரும் சற்று நம்­பிக்கை அளித்­த­னர். ஆனா­லும், இந்­திய வீரர்­களின் அரு­மை­யான பந்­து­வீச்­சால் ஒரு கட்­டத்­தில் 97 ஓட்­டங்­க­ளுக்கு ஐந்து விக்­கெட்­டு­களை இழந்து தத்­த­ளித்த பாகிஸ்­தான், பின்­னர் 19.5 ஓவர்­களில் 147 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

இலக்கை விரட்­டிய இந்­திய அணிக்­குத் தொடக்­கத்­தி­லேயே அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. லோகேஷ் ராகுல் தாம் எதிர்­கொண்ட முதல் பந்­தி­லேயே ஆட்­டம் இ­ழந்­தார். ரோகித் 12 ஓட்­டங்­க­ளை­யும் 100வது டி20 போட்­டி­யில் ஆடிய விராத் கோஹ்லி 35 ஓட்­டங்­க­ளை­யும் சூர்யகுமார் யாதவ் 18 ஓட்டங்களையும் எடுத்­தனர்.

இத­னால் சற்று நிமி­ரத் தொடங்­கிய பாகிஸ்­தா­னுக்­குப் பெரும் சோத­னை­யாக விளங்­கி­யது ஜடேஜா-பாண்­டியா இணை­யின் ஆட்­டம். இரு­வ­ரும் சேர்ந்து 5வது விக்­கெட்­டுக்கு 52 ஓட்­டங்­க­ளைக் குவித்­தனர். கடைசி ஓவ­ரில் ஏழு ஓட்­டங்­கள் தேவைப்­பட்ட நிலை­யில், முதல் பந்­தில் ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்­சி­ய­ளித்­தார் ஜடேஜா (35). ஆனா­லும், 4வது பந்­தில் சிக்­சர் விளாசி, இந்­திய அணி­யின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­னார். இவர் 18 பந்­து­களில் 33 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார்.

அடுத்­த­தாக, நாளை இரவு நடக்க இருக்கும் ஆட்­டத்­தில் ஹாங்­காங்­கு­டன் இந்தியா பொருதவுள்ளது.