காற்பந்து வீரர் வீட்டில் கொள்ளை; இரண்டு மாதங்களில் 2ஆம் முறை

காற்பந்து வீரர் வீட்டில் கொள்ளை; இரண்டு மாதங்களில் 2ஆம் முறை

1 mins read
a4991678-5f5a-4b9c-ad1b-599b2c3932ea
-

பார்­சி­லோனா: முன்­னணி ஸ்பா­னி­யக் காற்­பந்­துக் குழு­வான பார்­சி­லோ­னா­விற்­காக விளை­யா­டி­வ­ரும் பியர் எம­ரிக் ஒப­மெ­யாங்­கின் (படம்) வீட்­டில் புகுந்த கொள்­ளை­யர்­கள், அவ­ரை­யும் அவ­ரின் மனை­வி­யை­யும் தாக்­கி­விட்டு, வீட்­டி­ல்­இருந்த நகை­க­ளைக் கொள்­ளை அ­டித்­துச் சென்­ற­தாக ஸ்பெ­யின் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டு உள்­ளன.

ஆயு­த­மேந்­திய கொள்­ளை­யர்­கள் தாக்­கி­ய­தில் 33 வயது ஒப­மெ­யாங்­கும் அவ­ரின் மனைவி அலிசா பெகாக்­கும் காய­ம­டைந்­த­தாக 'எல் பெய்ஸ்' எனும் ஸ்பா­னிய நாளேட்­டுச் செய்தி கூறு­கிறது.

பார்­சி­லோ­னா­வின் புற­ந­கர்ப் பகு­தி­யில் வசித்­து­வ­ரும் ஒப­மெ­யாங்­கின் வீட்­டில் கொள்ளை நடந்­தி­ருப்­பது கடந்த இரு மாதங்­களில் இது இரண்­டாம் முறை.

முக­மூடி அணிந்த நால்­வர் நேற்று ஒப­மெ­யாங்­கின் வீட்­டிற்­குள் புகுந்­த­தா­க­வும் துப்பாக்கியையும் இரும்புத் தடியையும் காட்டி மிரட்டி, நகை­கள் இருந்த பெட்­ட­கத்­தைத் திறக்­கச் செய்­த­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் கூறின.

"ஒபமெயாங் பயந்துவிட்டார். ஆனாலும் இப்போது நன்றாக இருக்கிறார்," என்று பார்சிலோனா குழு தெரிவித்தது.

ஐரோப்பாவின் முன்னணிக் காற்பந்து வீரர்கள் கொள்ளைக்கு ஆளாவது இது முதன்முறையன்று. இங்கிலாந்தில் கடந்த டிசம்பரில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ஜுவாவ் கன்சியோவும் போர்ச்சுகலில் பென்ஃபிகா குழுவின் நிக்கலஸ் ஓட்டமெண்டியும் தங்கள் வீட்டில் இருந்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.