மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளான மகாதீர் முகம்மது

மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளான மகாதீர் முகம்மது

1 mins read

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி­யுள்­ளார். அதைத் தொடர்ந்து 97 வயது டாக்­டர் மகா­தீர் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரின் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

டாக்­டர் மகா­தீர் பல இரு­த­யப் பிரச்சினை­களை எதிர்­கொண்­ட­வர். இவ்­வாண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் தேதி­யன்று அவர் மேலும் ஒரு இரு­தய அறுவை சிகிச்­சை மேற்­கொண்­டார்.

அதற்கு சுமார் ஒரு மாதத்­திற்­குப் பிறகு சிகிச்­சைக்­காக டாக்டர் மகாதீர் மீண்­டும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்கப்­பட்­டார். பிப்­ர­வரி மாதம் மருத்து­வ­ம­னை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அப்போது உயிர் பிழைக்க வாய்ப்­பில்லை எனத் தாம் நினைத்­த­தாக டாக்­டர் மகா­தீர் கடந்த மார்ச் மாதம் கூறி­யி­ருந்­தார். டாக்­டர் மகா­தீர் மொத்­தம் 24 ஆண்­டு­கள் மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்­தார். அவரே ஆக அதிக காலம் பிரதமர் பதவியை வகித்­த­வர்.

இன்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்கும் டாக்­டர் மகா­தீர் சிறை­யில் இருக்­கும் மற்றொரு முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் திரு நஜிப் ரசாக்கை அவ்­வப்­போது தாக்­கிப் பேசு­வ­துண்டு.

இரண்டு முறை மலே­சி­யப் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்த டாக்­டர் மகா­தீ­ருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டுள்­ளது.