தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திறன் கண்காட்சியான சிங்கப்பூர் இரவு விழா

2 mins read
e8692584-a859-4caf-9596-6111e6938d00
(மேல்படம்) ஃபோர்ட் கேனிங் பூங்காவில் அமைந்துள்ள கலைப் படைப்புடன் திருமதி யோகமலர்.பிராஸ் பாசா-பூகிஸ் காம்ப்ளெக்சில் ஃபிஷ் ஜாஃபரின் 'புத்தக நகரம்' என்ற ஒளிப்படைப்பு. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், யோகமலர் தியாகராஜன் -
multi-img1 of 2

பொன்­மணி உத­ய­கு­மார்

கலை, கலா­சா­ரத்­தின் வளர்ச்­சிக்­குப் பெரும் பங்­காற்­றும் வகை­யில் இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் இரவு விழா அமைந்­தி­ருந்­தது.

இத­னு­டன் கலை­ஞர்­கள் தங்­கள் திறன்­களை வெளிப்­ப­டுத்த வாய்ப்பு­கள் அளிப்­பது, பழமை வாய்ந்த பிராஸ் பாசா-பூகிஸ் வட்­டா­ரத்­தின் வர­லாற்­றை­யும் மர­பு­டை­மை­யை­யும் நினை­வூட்­டு­வது போன்­ற­வற்றை சிங்­கப்­பூர் இரவு விழா அதன் இலக்கு­க­ளாக கொண்­டுள்­ள­தாக விழாக்­கள் மற்­றும் வட்­டார மேம்­பாட்­டுப் பிரி­வைச் சேர்ந்த ஏற்­பாட்­டுக் குழு­வின் துணை மேலா­ளர் திரு­மதி யோக­ம­லர் தியா­க­ரா­ஜன், 37, விளக்­கி­னார்.

பிராஸ் பாசா-பூகிஸ் வட்­டா­ரத்­தில் அதி­க­மான வர­லாற்­றுத் தளங்­கள், மர­பு­டை­மைத் தளங்­கள், அருங்­காட்­சி­ய­கங்­கள் அமைந்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், இவற்­றில் மறைந்­து­கி­டக்­கும் கதை­க­ளை­யும் வர­லாற்­றை­யும் வெளிப்­ப­டுத்தி மக்­களுக்­குக் கலை வடி­வத்­தில் அவற்­றைக் கொண்டு சேர்க்க விரும்பு­வதாக குறிப்­பிட்­டார்.

உள்­ளூர் மற்­றும் சிங்­கப்­பூர்­வாழ் வெளி­நாட்­டுக் கலை­ஞர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்த பயி­ல­ரங்கு ஒன்­றுக்­கும் விழா­வைத் திட்­ட­மிட்­டக் குழு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. தங்­கள் திறனை வெளிப்­ப­டுத்த இத்­த­கைய கலை­ஞர்­க­ளுக்கு ஒரு தளம் அமைத்­துத் தர­வும் மேலும் பல கலை ரசி­கர்­கள், பார்­வை­யாளர்­களை ஈர்க்­க­வும் சிங்­கப்­பூர் இரவு விழா இயங்கி வரு­கிறது.

விழா­வின் பல்­வேறு அங்­கங்­களாக பல­த­ரப்­பட்ட கலை­நி­கழ்ச்சி­கள், வட்­டா­ரத்­தைச் சுற்றி விளக்கு­கள் பொருத்­தப்­பட்ட சிற்­பங்­கள், கலை ஓவி­யப் படைப்­பு­கள் போன்­ற­வற்றை மக்­கள் கண்டு களித்­த­னர்.

இரண்­டாம் உல­கப் போருக்கு முன் தொடங்கி 83 ஆண்­டு­க­ளுக்­குப் பின் இவ்­வாண்டு மூடப்­பட்ட 'தி கெத்தே' திரை­ய­ரங்­கிற்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் தற்­செ­ய­லாக அமைந்­தி­ருந்த சிங்­கப்­பூர் இரவு விழா­வின் சிறப்பு அங்­க­மும் மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றது.

வரும் ஆண்­டு­க­ளி­லும் இதே வட்­டா­ரத்­தில் தொடர்ந்து வர­லாற்­றை­யும் மர­பை­யும், கால­னித்­து­வத்­திற்கு முந்­தைய கதை­க­ளை­யும் மக்­க­ளுக்­குக் கலை மற்­றும் ஓவி­யப் படைப்­பு­கள் மூலம் கொண்டு செல்ல விழா­வின் ஏற்­பாட்­டுக் குழு முனை­வ­தாக யோக­ம­லர் கூறு­கிறார்.

காலை நேரங்­களில், பர­ப­ரப்­பா­க­வும் சுறு­சு­றுப்­பா­க­வும் இயங்­கும் ப்ராஸ் பாசா-பூகிஸ் வட்­டா­ரம், இர­வில் ஒளி­யூட்­டப்­பட்டு கலை­ந­யத்­து­டன் காட்­சி­ய­ளிப்­பதை மக்­கள் காணும்­போது அவர்­க­ளின் மன அழுத்­தம் குறை­யக்­கூ­டும் என்­றும் யோக­ம­லர் கரு­து­கி­றார்.

இனி வரும் ஆண்­டு­களில், தொடர்ந்து விழா­வின் அம்­சங்­களுக்கு சிறப்­பூட்­ட­வும் விழாவை விரி­வு­ப­டுத்­த­வும் திட்­டங்­கள் இருப்­ப­தாக யோக­ம­லர் கூறி­யுள்­ளார்.