தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடக் கண்காட்சிக்கு இலவச அனுமதி

1 mins read

சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டம் தற்­போது நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் இரண்டு கண்­காட்­சி­க­ளைப் பொது­மக்­கள் இனி இல­வ­ச­மா­கக் கண்டு களிக்­க­லாம் என்று தெரி­வித்­துள்­ளது.

'சுவா மியா டீ: டைரக்­டிங் த ரியல்', 'எவர் பிர­சண்ட்: ஃபர்ஸ்ட் பீப்­பிள்ஸ் ஆர்ட் ஆஃப் ஆஸ்ட்­ரே­லியா' ஆகி­யவை அந்­தக் கண்­காட்­சி­கள்.

'சுவா மியா டீ: டைரக்­டிங் த ரியல்' கண்­காட்சி, சிங்­கப்­பூ­ரின் கம்­பீ­ர­மான நவீ­னத்­துவ அழகை எடுத்­து­ரைக்­கிறது. சிங்­கப்­பூ­ரின் உரு­மாற்­றத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் கண்­காட்சி இது. 1950கள் முதல் 1980கள் வரை­யி­லான வளர்ச்சி யைக் காட்­டும் வேளை­யில் சிங்­கப்­பூ­ரின் அன்­றாட வாழ்­வைச் சித்­தி­ரிக்­கும் வித­மாக இது அமைந்­துள்­ளது. 'எஃப்1' இர­வு­நேர கார் பந்­த­யம் நடை­பெ­றும் நேரத்­தில் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வரக்­கூ­டிய பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் இந்­தக் கண்­காட்­சியை இன்று முதல் இம்­மா­தம் 25ஆம் தேதி வரை காண அனு­மதி இல­வ­சம்.

'எவர் பிர­சண்ட்: ஃபர்ஸ்ட் பீப்­பிள்ஸ் ஆர்ட் ஆஃப் ஆஸ்ட்­ரே­லியா' கண்­காட்­சி­யில் 150க்கும் மேற்­பட்ட ஆஸ்­தி­ரே­லி­யக் கலை­ஞர்­க­ளின் 170 படைப்­பு­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வர­லாறு, கலா­சாரம், பழங்­கு­டி­யி­னர் உள்­ளிட்ட பல்­வேறு விவ­ரங்­களை எடுத்­துக்­கூ­றும் இந்­தக் கண்­காட்­சியை இம்­மா­தம் 23ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி­வரை இல­வ­ச­மா­கக் காண­லாம்.

இந்த அரிய வாய்ப்­பைத் தவ­ற­வி­டா­மல் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும்­படி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.