தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக கணித்தமிழ், தகவல், தொழில்நுட்ப மாநாடு

2 mins read

தமி­ழில் முதல் கணி­னித் தொழில்­நுட்ப மாநாடு நடை­பெற்று 25 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த நிலை­யில், இந்த ஆண்­டின் அனைத்­து­லக கணித்­த­மிழ், தக­வல் தொழில்­நுட்ப மாநாடு இம்­மா­தம் 3, 4ஆம் தேதி­களில் அடித்­தள அமைப்­பு­கள் மன்­றத்­தில் நடை­பெற்­றது.

இதில் மரின் பரேட் தொகு­தி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமி­ழர் பேர­வை­யின் ஆலோ­ச­க­ரு­மான ஆர். ரவீந்­தி­ரன், இணை­யம்­வழி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி வளர்ச்­சிக்­குப் புத்­தாக்­கச் சிந்­த­னை­கள் பெரும்­பங்கு ஆற்ற முடி­யும் என்­பதை அவர் தமது உரை­யில் வலி­யு­றுத்­தி­னார்.

கணித்­த­மிழ் வழி மின்­னி­யல் வளர்ச்­சிக்கு வித்­திட்­ட­வர்­களில் முன்­னோ­டி­யான பேரா­சி­ரியர் டான் டின் வீ ஆற்றிய உரையில், வருங்­கா­லத்­தில் கணி­னிக் கட்­ட­மைப்­பு­க­ளின் வளர்ச்சி, பயன்­பாடு ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்­து­ரைத்­தார்.

பிற நாடு­க­ளோடு ஒன்­றிணைந்து முன்­னே­றும் வழி­மு­றை­க­ளை­யும் அவர் பகிர்ந்து கொண்­டார். சிங்­கப்­பூ­ரில் 90களில் தொடங்­கிய கணினி வளர்ச்சி என்­றும் சிறந்­தி­ருக்­கும் என்­றார் அவர்.

இந்த மாநாட்­டில் தமி­ழ­கம், மலே­சியா, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளின் வல்­லு­நர்­கள் நேர­டி­யா­க­வும் இணை­யம் வழி­யா­க­வும் கலந்­து­கொண்­ட­னர்.

இணை­யப் பாது­காப்பு, அன்­றாட மின்­னி­யல் செயல்­திட்­டங்­கள், மெய்­நி­கர் தொழில்­நுட்­பம். கற்­றல், கற்­பித்­தல் பயன்­பாடு, புத்­தாக்­கத் தொழில் முனைப்பு, தமி­ழில் கலைச்­சொற்­கள், மொழி­பெ­யர்ப்பு எனப் பல அம்­சங்­களில் கணித்­த­மி­ழின் வளர்ச்சி குறித்து இவர்­கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து­கொண்­ட­னர்.

கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்து சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் மலேசியா, தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்தும் வல்லுநர்கள் பேசினர்.

ஈராண்­டுக்­குப் பிறகு நேர­டி­யாக நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சிக்கு வளர்­த­மிழ் இயக்­கம், தொடர்பு, தக­வல் அமைச்­சின்­கீழ் இயங்­கும் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு ஆகி­யவை ஆத­ரவு அளித்­தன. இதில் வெளி­யி­டப்­பட்ட மாநாட்­டுச் சிறப்­பி­தழ் இளை­யர்க்கு கணினி சார்ந்த அரிய தக­வல்­களை வழங்­கும் விதத்­தில் உரு­வாக்­கப்­பட்­ட­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

தமிழ், புதிய பாதையில் புத்தாக்கச் சிந்தனைகள் சார்ந்த மின்னியல் வளர்ச்சியோடு உயர்வடைய இந்த மாநாடு வலுவான அடித்தளமிட்டதாகக் கூறப்பட்டது.