கவலையும் பதற்றமும் ஏற்படும்போது சிலர் '333 உத்தி'யைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் இருக்கும் சூழலில் திடீரெனச் சமாளிக்க முடியாத உணர்ச்சிகளில் ஒருவர் சிக்கும்போது, இந்த உத்தி உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த '333 உத்தி'யைப் பயன்படுத்தும்போது ஒருவர் தம்மைச் சுற்றி நடப்பதைக் கவனிக்க வேண்டும். அதன்படி,
1. கண்ணில் படும் மூன்று
பொருள்களைப் பற்றி கூறவேண்டும்.
2. காதில் விழும் மூன்று ஒலிகளை அடையாளம் காணவேண்டும்.
3. மூன்று பொருள்களைத் தொட
வேண்டும்.
இந்த '333 உத்தி' குறித்து முறையான ஆராய்ச்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படாவிட்டாலும் அதிகப்படியான கவலையை மெல்லத் தணிக்க உதவும் எளிய பயிற்சியாகப் பலரும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இருப்பினும், சிகிச்சைக்குப் பதிலாக இந்த உத்தியைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
மனநல சிகிச்சை பெறுவதற்கு இடையே பொதுவான சில உத்திகளை ஒருவர் கடைப்பிடிக்கலாம்.
நெருக்குதல் தரும் சூழலிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளவும். விருப்பமான இசையைக் கேட்கலாம் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
மது அருந்துதல், காப்பி குடித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். இவற்றால் கவலை அதிகரிக்கலாம்.
நகைச்சுவை இயற்கையாகவே நம்மை அமைதிப்படுத்துவதால் சிரிக்க மறவாதீர்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். போதிய தூக்கமும் ஆரோயக்கிய உணவுமுறையும் முக்கியம்.
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் இந்தத் தருணத்தில் மட்டும் கவனம் செலுத்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
வெவ்வேறு மூச்சுப் பயிற்சிகளைக் கையாண்டு மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்வதன் வழியாகவும் ஒருவர் தமக்கு ஏற்படும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் கையாளலாம்.

