முதுமையிலும் துடிப்புடன் வலம்வர கைகொடுக்கும் வாசிப்புப் பழக்கம்

முதுமையிலும் துடிப்புடன் வலம்வர கைகொடுக்கும் வாசிப்புப் பழக்கம்

2 mins read

இம்மாதம் 8ஆம் தேதி வியாழக்கிழமை கால­மான பிரிட்டனின் எலி­ச­பெத் அரசி, 96 வயதிலும் துடிப்பாக இருந்­தார்.

உடல் மூப்­படைந்தாலும் மன­த­ள­வில் அவர் இளமை­யாக இருந்­தார்.

இறப்­ப­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னர்­கூட பிரிட்­ட­னின் புதிய பிர­த­மர் லிஸ் டிரசை ஸ்காட்­லாந்­தில் உள்ள பால்­மோ­ரல் அரண்­ம­னை­யில் சந்­தித்து, புதிய அர­சாங்­கத்தை அமைக்­கும்­படி அவ­ருக்கு அழைப்பு விடுத்­தார்.

தமது 70 ஆண்டு ஆட்­சி­யில் எலி­ச­பெத் அரசி தொய்­வ­டை­யாமல் துடிப்­பு­டன் செய­லாற்­றி­யதற்கு அவர் கடைப்­பி­டித்த மனப்­ப­யிற்­சி­கள் முக்­கிய கார­ணம் என்று அவ­ரது வாழ்க்கை வர­லாற்றை எழு­திய பிரை­யன் கொஸ்­லாவ்ஸ்கி விளக்­கி­னார்.

காலை­யில் எழுந்­த­வு­டன் எலி­ச­பெத் அரசி செய்­தித்­தாள் வாசித்தார் என்­றும் அர­சி­யல், சமூக நடப்­பு­கள் பற்றி தெரிந்து ­கொள்ள இது அவ­ருக்கு உத­வி­யது என்­றும் திரு கொஸ்­லாவ்ஸ்கி கூறி­னார்.

அடுத்து தின­மும் ஒரு சிவப்­புப் பெட்டி­யில் அர­சாங்க ஆவ­ணங்­கள் அவ­ருக்கு வழங்­கப்­படும்.

உள­வுத் துறை அறிக்­கை­கள், நாடா­ளு­மன்ற அறிக்­கை­கள் உள்­ளிட்ட ஆவ­ணங்­கள் அனைத்­தை­யும் அவர் தின­மும் முழு­மை­யாகப் படித்தார் என்­றும் கூறப்­பட்­டது. தொடர்ந்து வாசித்­தது அவர் மன­ந­ல­னும் சிந்­த­னைத் திற­னும் குன்­றா­மல் இருக்க உத­வின என்­றார் திரு கொஸ்­லாவ்ஸ்கி.

அறி­வி­யல் கூறும் வாசிப்­பின் பயன்­கள்

வாசிப்புப் பழக்கம் பல நன்மைகளைத் தருவதாக பல அறிவியல் ஆய்வுகள் கூறியுள்ளன.

முத­லில், வாசிப்பு சொல்­வ­ளத்­தைப் பெருக்கு­கிறது. அடுத்து, வாசிப்பு மூளையை வலுப்­ ப­டுத்த உத­வு­கிறது.

மூன்­றா­வ­தாக, மன­மும் சிந்­த­னை­யும் ஆக்ககரமான ஒன்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உறு­தி­செய்­வ­தும் வாசிக்கும் பழக்கமும் மூளைச் செயல்­பாடு குறை­வ­தைத் தடுக்­கின்றன.

தின­மும் வாசிக்­கும் அல்­லது கணக்கு போட்டு பார்க்­கும் முதி­ய­வர்­க­ளின் மூளைச் செயல்­பாடு தேங்­கா­மல் மாறாக மேம்­ப­டு­கிறது என்று பல ஆய்­வு­கள் கூறி­யுள்­ளன.

மேலும், அறி­வுத் திற­னு­டன் மற்­ற­வர் மனம் அறிந்து பரிவு கொள்­ளும் ஆற்­ற­லை­யும் வாசிப்பு வளர்க்­கிறது.

அடுத்து, தூங்கு வதற்கு முன்பு வாசிப்­பது மன­தைத் தளர்­வாக்கி எளி­தில் தூங்­க­வும் உதவி செய்­கிறது.

அதனுடன், தொடர்ந்து வழக்­க­மாக வாசிக்­கும்­போது மன­அ­ழுத்­தம் குறை­கிறது.

குறிப்­பாக புனைவு வாசிக்­கும்­போது அதில் உள்ள கதைக்­க­ளம், கரு, கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் ஒன்றி, சிறி­து­நே­ரம் வாச­கர்­கள் தங்­க­ளையே மறந்து நூல் அழைத்­துச் செல்­லும் உல­குக்­குள் சென்று விடு­கின்­ற­னர்.

அத்­து­டன், நாவல்களை வாசிக்கும் பழக்­கம் உள்­ள­வர்­க­ளுக்கு மற்­ற­வர்­க­ளை­விட இரண்டு ஆண்­டு­கள் கூடு­தல் ஆயுள் உள்­ள­தாக யேல் பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்வு கூறி­யது.

மேலும் புனைவு இல்­லாத சுய உதவி நூல்­கள், மன அழுத்­தத்­தின் அறி­கு­றி ­க­ளைச் சமா­ளிக்க உத­வு­கின்­றன.