அகால மரணமும் மறதி நோயும் ஏற்படும் அபாயம் குறைகிறது நலன்காக்க நடக்கலாம்

அகால மரணமும் மறதி நோயும் ஏற்படும் அபாயம் குறைகிறது நலன்காக்க நடக்கலாம்

2 mins read

ஒரு நாளில் பத்­தா­யி­ரம் அடி நடப்­ப­தால், புற்­று­நோய், இதய நோய், மறதி நோய், அகால மர­ணம் ஆகி­யவை ஏற்­படும் அபா­யத்­தைக் குறைக்க முடி­யும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

அத்­து­டன் நீங்­கள் எவ்­வ­ளவு வேகம் நடக்­கி­றீர்­கள் என்­ப­தும் முக்­கி­யம் என்று அது கூறி­யது.

அந்த ஆய்வு, 'ஜாமா' மருத்­துவ ஆய்­வி­த­ழில் நேற்­று­முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது. சிட்னி, தெற்கு டென்­மார்க் பல்­க­லைக்­க­ழ­கங் களைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் அதை மேற்­கொண்­ட­னர். அதில் பிரிட்­ட­னில் உள்ள 78,500 பேர் ஏழு நாள்­க­ளுக்கு தாங்­கள் எடுத்துவைக்­கும் அடி­க­ளைக் கணக்­கி­டும் கரு­வி­களை அணிந்­த­னர். அவர்­க­ளின் உடல் நலம் கண்­கா­ணிக்­கப்­பட்­டது.

ஆனால் உடல் நன்மை பெற, பத்­தா­யி­ரம் அடி எடுத்து வைக்­கத் தேவை­யில்லை. குறை­வாக நடந்­தா­லும் நாம் எடுத்து வைக்­கும் ஒவ்­வோர் அடி­யும் உட­லுக்கு நல்­லது என்­றும் ஆய்வு தெரி­வித்­தது.

ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­கள் எடுத்து வைத்த ஒவ்­வோர் ஈரா­யி­ரம் அடிக்­கும் அகால மர­ணத்­தின் அபா­யம் 8 விழுக்­காடு முதல் 11 விழுக்­காடு வரை குறைந்­தது. புற்று நோய், இத­ய­நோய் போன்­ற­வற்­றுக்­கும் இது பொருந்­தி­யது.

அதே வேளை­யில் நாளுக்கு பத்­தா­யி­ரம் அடிக்கு மேல் நடந்­தால் அத­னால் அதிக பல­னில்லை என்று ஆய்வு கூறி­யது.

கூடு­தல் அடி­கள் நடந்­தால் மறதி நோய் அபா­ய­மும் குறைந்­தது.

நாளுக்கு 10,000 அடி­கள் நடந்­த­வர்­க­ளுக்கு மற­தி­நோய் ஏற்­படும் அபா­யம் 50 விழுக்­காடு குறைந்­தது. மேலும், நாளுக்கு சுமார் 3,800 அடி­கள் நடப்­ப­வர்­க­ளுக்கு மற­தி­நோய் ஏற்­படும் அபா­யம் 25 விழுக்­காடு குறைந்­தது.

ஒரு­வர் நடக்­கும் வேக­மும் அவர்­க­ளின் உடல்­ந­ல­னைத் தீர்­மா­னிப்­ப­தா­க­வும் ஆய்வு முடி­வு­கள் காட்­டின. வேக­மாக நடந்­த­வர் களுக்கு இதய நோய், புற்­று­நோய், மறதி நோய், அகால மர­ணம் எல்­லா­வற்­றின் அபா­யம் குறைந்­தது.

ஒரு நிமி­டத்­துக்கு 40 அடி எனும் வேகத்­தில் நாளுக்கு 6,153 அடி எடுத்து வைத்­த­போது, மற­தி­நோய் ஏற்­படும் அபா­யம் 57 விழுக்­காடு குறைந்­தது.

அத்­து­டன், ஒரு நாளில் 30 நிமி­டத்­துக்கு, ஒரு நிமி­டத்­துக்கு 112 அடி­கள் எனும் வேகத்­தில் நடந்­த­வர்­க­ளுக்கு மற­தி­நோய் அபா­யம் 60 விழுக்­காடு குறைந்­தது. ஒரே நேரத்­தில் 30 நிமி­டங்­கள் நடக்­கத் தேவை­யில்லை.

இத­னால், வீட்டு வேலை­கள், தோட்ட வேலை போன்ற அன்­றாட திட்­ட­மி­டப்­ப­டாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோர் தாங்­கள் எடுத்து வைக்­கும் அடி­க­ளைக் கணக்­கிட்­டால் நல்­லது என்று ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் போர்ஜா டெல் போஸோ குரூஸ் கூறி­னார்.