இயற்கைச் சத்து மிகுந்த வெல்லம்

இயற்கைச் சத்து மிகுந்த வெல்லம்

2 mins read
7775b81a-1d9b-4673-b8f2-e8893ea36f16
தெற்காசிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகளைத் தவிர, ஜப்பான், கொலம்பியா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளிலும் வெல்லத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கோப்புப் படம்: -
Google News Preferred Icon

உண­வு­வ­கை­க­ளுக்­கும் பானங் ­க­ளுக்­கும் சுவை கூட்­டும் பனை­வெல்­லத்­துக்கு பல மருத்­து­வப் பண்­பு­கள் உண்டு. ஆயுர்­வே­தத்­தி­லும் சித்த மருத்­து­வத்­தி­லும் வெல்­லம் காலம் கால­மா­கப் பயன்­பட்டு வந்­துள்­ளது.

வெள்ளை அல்­லது பழுப்­பு­நி­றச் சர்க்­க­ரை­யைத் தயா­ரிக்­கும்­போது சேர்க்­கப்­படும் ரசா­ய­னங்­கள் வெல்­லத்­தில் சேர்க்­கப்­ப­டு­வ­தில்லை.

அத­னால் வெல்­லத்­தில் இயற்கை யாக உள்ள சத்­து­கள் அழிக்­கப்­ ப­டு­வ­தில்லை.

வெல்­லத்­தில் அதிக நார்ச்­சத்து உண்டு. அது உண­வுக் குழாய், வயிறு, நுரை­யீ­ரல் என உட­லின் உள் உறுப்­பு­களை சுத்­தம் செய்­யக் கூடி­யது. அத­னால்­தான் உணவு உண்­ட­பி­றகு ஒரு துண்டு வெல்­லம் சாப்­பி­டும் பழக்­கம் இருந்­தது.

வயிற்­றில் உள்ள செரி­மா­னத் திர­வங்­க­ளைத் தூண்­டி­விட்டு, சீர­ணத்தை சரி செய்­யும் ஆற்­றல் வெல்­லத்­துக்கு உண்டு.

சர்க்­கரை சேர்த்­துக் கொள்­ளும்­போது வயிற்­றில் அமி­லத்­தன்மை கூடும். வெல்­லம் சேர்த்­துக் கொள்­வோ­ருக்கு பெரும்­பா­லும் இந்­தப் பிரச்­சினை வரு­வ­தில்லை.

பனை வெல்­லம், ரத்­தத்­தை­ சுத்­தப்­ப­டுத்­தக் கூடி­யது. பனை­வெல்­லத்­தில் இரும்­புச் சத்து, கால்­சி­யம், செலி­னி­யம், மெக்­னீ­சி­யம் போன்ற போன்றவை அதி­க­மாக உள்­ளன. பி1, பி2, பி3, பி6 பி12 ஆகிய சத்து­ களும் அதில் உள்­ளன.

வெல்­லம் அழற்­சியை எதிர்க்­கும் தன்மை கொண்­டது. பனை வெல்­லம், நெய், இஞ்சி ஆகி­ய­வற்றை சேர்த்து உட்­கொண்­டால் தசை வலி, மூட்டு வலி போன்­றவை குறை­யும் என்று ஆயுர்­வேத மருத்து­ வத்­தில் கூறப்­பட்­டது.

கல்­லீ­ரலை சுத்­தப்­ப­டுத்­த­வும் மலச்­சிக்­க­லைத் தீர்க்­க­வும் உட­லுக்கு சக்தி அளிக்­க­வும் வெல்­லம் உத­வு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பெண்­க­ளுக்கு இரும்புச்சத்து, நார்ச்­சத்து, கால்­சி­யம் ஆகியவை அதி­கம் தேவை. இவை மூன்­றை­யும் கொண்­டது வெல்­லம். மாத­வி­டாய் தொடங்­கிய பெண்­க­ளுக்கு வெல்­லம் அல்­லது கருப்­பட்டி சேர்த்த உளுத்­தங்­களி கொடுப்­பது இத­னால்­தான்.

கருவுற்ற பெண்கள் எடையை அதி­கம் கூட்­டா­மல், அதே நேரம் உட­லுக்கு வலுகொடுக்க, என்ன இனிப்பு கொடுத்­தா­லும் அதில் வெல்­லம் சேர்ப்­பார்­கள்.

பிர­ச­வத்­துக்­குப் பிறகு, பெண்­ க­ளின் உட­லில் தேங்­கி­யி­ருக்­கும் அழுக்­கு­களை அகற்ற, கருஞ்­சீ­ர­க­மும் கருப்­பட்­டி­யும் சேர்த்­துச் செய்த உருண்­டை­யைப் பிர­சவ மருந்­தா­கக் கொடுப்­ப­துண்டு. அதைக் கொடுத்­தால் உடனே ரத்­தப்­போக்கு உண்­டாகி அழுக்கு வெளி­யே­றும்.

அள­வுக்கு மீறி­னால் வெல்­ல­மும் கெடு­தல் தரும். என்­ன­தான் நற்­கு­ணங்­கள் இருந்­தா­லும் வெல்­ல­மும் சர்க்­க­ரை­தான். அதி­கப்­ப­டி­யாக அதை உட்­கொண்­டால் ரத்­தத்­தில் சர்க்­கரை அளவு கூடும். உடல் பரு­மன் கூடும் அபா­ய­மும் உள்­ளது. அத்­து­டன், அள­வுக்கு அதி­க­மாக வெல்­லம் சில வகை ஒவ்­வா­மை­க­ளை­யும் அசீ­ர­ணத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­றும் மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.