ஆப்பிள், கூகல், மைக்ரோசாஃப்ட், ெமட்டா மற்றும் அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் தாங்கள் வெளியிட இருக்கும் புதிய செயலிகள், சேவைகள் அல்லது இயங்குமுறைகள் தொடர்பான பிழைகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவிப்போருக்கு அந்நிறுவனங்கள் வெகுமதி வழங்கும். இதற்கு, பக் பவுண்டி (Bug bounty) எனப்படும்.
பொதுவாக, இந்தத் தயாரிப்புகளை பிழை கண்டறிய தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முறை இணைய ஊடுருவிகளிடம் இந்நிறுவனங்கள் வழங்கும். எந்தவொரு மென்பொருளும் அல்லது செயலியும் வெளியிடப்படுவதற்கு முன்னர் தவறவிட்ட சில பிழைகளைக் கண்டறிய இந்த வழிமுறை பல நிறுவனங்களுக்கு உதவுகிறது. அந்த வகையில், கூகல் நிறுவனத்தின் 'ஓப்பன் சோர்ஸ்' மென்பொருள் பிழைகளைக் கண்டறிவதற்கான திட்டத்தை (OSS VRP) தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
வெகுமதித் திட்டங்களில் (VRPs) கூகலின் OSS VRPஐச் சேர்ப்பதன் மூலம், முழு அளவிலான திறந்த மூல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கமுடியும். மேலும் பாதிக்கக்கூடிய பிழைகளைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு செயல்முறை வெகுமதிகளும் வழங்கப்படுவதாக கூகல் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த பக் பவுண்டி திட்டமானது Fuchsia, Golang மற்றும் Angular போன்ற திறந்த மூல திட்டங்களுக்கானது என்றும் அது குறிப்பிட்டுள்ளது
பிழைகளின் தீவிரம் மற்றும் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, வெகுமதிகள் US$100 வரை இருக்கும். வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான பிழைகளுக்கு பெருந்தொகை வழங்கப்படும். எனவே இதன்மூலம் ஒருவரின் படைப்பாற்றல் ஊக்குவிக்கப்படுவதாகவும் கூகல் கூறியுள்ளது.
கூகல் அதன் தற்போதைய 'பக் பவுண்டி' திட்டங்கள் மூலம், 84க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பிழை கண்டுபிடிப்பாளர்களுக்கு (பக் ஹண்ட்டர்ஸ்) வெகுமதிகளை அளித்துள்ளது.
இதுவரை ஒட்டுமொத்தமாக, இந்த திட்டங்கள் மூலம் 13,000க்கும் மேற்பட்ட சமர்ப்பிப்புகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இதன் மொத்த வெகுமதி US$38 மில்லியன் எனக் கூகல் நிறுவனம் கூறியுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கும் திறன்படைத்தவர்கள் கூகலின் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெகுமதி பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் கூகலின் இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி வெகுமதி பெற முயலலாம்.

