இணைய மோசடி மற்றும் ஊடுருவல்களில் இருந்து தப்பிக்க எவ்வளவோ வழிகள் இருந்தாலும் சில முக்கிய யோசனைகளை இங்கு பார்க்கலாம்.
முதலில், Haveibeenpwned என்ற 'டூல்'ஐ பயன்படுத்தி உங்கள் மின்னணு சாதனத்தில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு உள்ளனவா அல்லது திருட முயற்சி நடந்துள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருவேளை திருடப்பட்டி ருந்தால் எந்த மாதிரியான தகவல்கள் திருடப் பட்டன என்பதையும் அறியலாம்.
டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எப்போதோ பகிர்வு செய்த தேவையில்லாத பதிவுகள், மதிப்பை குறைக்ககூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்குவது நல்லது. டுவிட்டைப் பொறுத்தவரை பழைய டுவிட் மற்றும் புகைப்படங்களை மொத்தமாக நீக்கமுடியாது என்றாலும் சில செய லிகள் மற்றும் மூன்றாம்தரப்பு சேவைகளைப் பயன்படுத்தி அவற்றை நீக்கலாம். நீண்டநாட்
களாகப் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் முகவரி, இணைய வர்த்தகக் கணக்குகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளை Shift+Delete கொடுத்து நிரந்தரமாக நீக்கிவிடுங்கள்.
கணினி, மடிக்கணினி மற்றும் நவீன கைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அவ்வப்போது 'அப்டேட்' செய்யுங்கள். பாதுகாப்பு மென்பொருள், தேடுபொறிக்கான 'டூல்'கள் ஆகியவற்றை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது இணைய ஊடுருவிகள் அவற்றில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி 'ஹேக்' செய்வதைத் தடுக்க உதவும்.
வங்கிக் கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள், முக்கிய ஆவணங்கள், சொத்து விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை கணினி, மடிக்கணினி, கைபேசி, மின்னஞ்சல் போன்ற வற்றில் சேமிப்பதற்குப் பதிலாக 'பென் டிரைவ்', 'ஹார்ட் டிஸ்க்' போன்ற கருவிகளில் சேமித்து வைப்பது இணைய ஊடுருவிகளின் கைகளில் சிக்காமல் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

