கலைக்கு சமயம் ஒரு தடையன்று

கலைக்கு சமயம் ஒரு தடையன்று

2 mins read
7c34a896-a8a9-4fe3-8f89-3c23908073db
தம் மாணவியருடன் திருவாட்டி கமாரியா யூசுப் (இடமிருந்து 3வது). படம்: கமாரியா யூசுப் -

ஆ. விஷ்ணு வர்­தினி

மேடை பர­த­நாட்­டிய நிகழ்ச்­சி­க­ளின்­போது பல­ரும் திரு­வாட்டி கமா­ரியா யூசு­ப்பின் நட­னத்­தைக் கண்டு வியந்­தி­ருக்­கின்­ற­னர். ஏனெ­னில், அவர் இந்து சம­யத்­தைச் சார்ந்­த­வரில்லை. இருப்­பி­னும், பர­தக்­கலை குறித்த ஆழ­மான புரி­த­லும் அதன்­மீது மிகுந்த பற்­றும் கொண்­டி­ருந்­தார் இவர்.

பதி­னெட்டு வய­தில் விளை­யாட்­டுத்­த­ன­மாக தொடங்­கிய பர­த­நாட்­டி­யப் பய­ணமே இவ­ரது அடை­யா­ள­மா­க­வும் வாழ்க்­கை­யா­க­வும் மாறி­விட்­டது.

சங்­கீத, பர­த­நாட்­டிய கலா­ர­சி­கராய்த் திகழ்ந்த தந்தை விதைத்த விதை­யில் தமது பர­த­நாட்­டி­யப் பற்று துளிர்­விட்டு வளர்ந்­த­தாய்க் கூறி­னார் 58 வய­தான திரு­வாட்டி கமா­ரியா.

ஆனால், தமது ஆசையை எதிர்த்த தம் தாயார், உற்­றார் உற­வி­னர்­க­ளின், சம­யம் சார்ந்த சமூ­கத்­தின் கேள்­வி­க­ளுக்கு அஞ்­சி­னார். தம் தோழி­க­ளுக்கு ஆடை அணி­க­லன்­களை வாங்­கித் தந்து, நடன நிகழ்ச்­சி­க­ளுக்கு நேரில் வந்து ஆத­ர­வ­ளித்த அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளைக் காணும்­போ­தெல்­லாம் ஏக்­க­மாக உணர்ந்­த­தாய் திரு­வாட்டி கமா­ரியா கூறி­னார். இவ­ரது நட­னப் பயிற்சி ரக­சி­ய­மா­கவே இருந்து வந்­தது.

"அம்­மா­வுக்கு நான் பொட்டு வைப்­ப­தெல்­லாம் பிடிக்­க­வில்லை. ஆனால், எனது வளர்ச்­சி­யை­யும் தணி­யாத பற்­றை­யும் கண்­ட­பின் அவர் மனம் மாறி­னார். எனது கலைப்­ப­ய­ணம் குறித்து இப்­போது குடும்­பத்­தார் அனை­வ­ருமே பெரு­மை­யாக உணர்­கின்­ற­னர்," என்­றார் திரு­வாட்டி கமா­ரியா.

பர­த­நாட்­டி­யத்­தின் மூலம் இந்து சம­யக் காப்­பி­யங்­கள், சடங்­கு­கள், கட­வுள்­கள் முத­லி­ய­வற்­றுக்கு அறி­மு­க­மான திரு­வாட்டி கமா­ரியா, அவற்­றைக் கதை­க­ளாக எண்ணி புரிந்­து­கொள்ள முற்­பட்­டார். தற்­போது அவ­ரி­டம் பயி­லும் கிறிஸ்­துவ, முஸ்­லிம் மாண­வர்­க­ளுக்­கும் இவர் அதே வழி­மு­றை­யைப் பகிர்ந்து­கொள்­கின்­றார்.

"பர­தம் ஆன்­மா­வைத் தொட­வல்­லது. அது சம­யத்­தை­யும் தாண்டி, நினை­வாற்­றலை மேம்­படுத்­தும்; நற்பண்புகளை வளர்க்­கும்," என்­றார் இவர்.

டெம்­பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் தொடங்கி, சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கத்­தில் நட­னம் பயின்­றார் திரு­வாட்டி கமா­ரியா. அதன்­பி­றகு, முழு­நே­ரத் தாயா­ராக இருந்த காலத்­தில், இவ­ருக்கு பள்­ளி­க­ளின் இந்­திய நட­னக்­குழுக்­களில் பகு­தி­நேர பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றும் வாய்ப்பு கிட்­டி­யது.

அதனைத் தொடர்ந்து, முழு­நேர நடன ஆசி­ரி­ய­ராக தொடக்கப்­பள்ளி­க­ளி­லும் சமூக நிலை­யங்­களி­லும் அப்பணியை மேற்­கொண்­டார்.

2012ஆம் ஆண்­டில் 'தர்­ஷன் ஃபைன் ஆர்ட்ஸ்' என்ற நடன நிலை­யத்­தை­யும் தொடங்­கி­னார். ஒற்­றைத் தாயா­ரான தனக்கு, தன் இரு மகள்­க­ளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்­துக்­கொ­டுக்க பர­த­நாட்­டி­யமே பெரி­தும் கைகொ­டுத்­துள்­ள­தாக நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு­வாட்டி கமா­ரியா.

ஏறத்­தாழ 100 மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­ய­ராக உள்ள இவர், மாண­வர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஆர்­வத்­தை­யும் மன­நி­றை­வை­யுமே தம் பய­ணத்­தின் பய­னா­கக் கரு­து­கிறார்.