இதயத்துடிப்பு நின்றுபோவது பற்றி மருத்துவர்கள் விளக்கம்

இதயத்துடிப்பு நின்றுபோவது பற்றி மருத்துவர்கள் விளக்கம்

2 mins read
fc7b914b-f004-4cd6-9602-2be6ea230ec6
-

இத­யத்­து­டிப்பு நின்­று­போ­வது முன்­பை­விட இப்­போது அதிக­மா­கி­விட்­டது. இது, எந்த நேரத்­தி­லும் எவ­ரை­யும் பாதிக்­க­லாம். எனி­னும், பெரும்­பா­லா­னோ­ருக்கு அதி­காலை வேளை­யி­லேயே இது ஏற்­ப­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வின் ஹரியானா மாநிலம், குரு­கி­ராம் நக­ரைச் சேர்ந்த இதய மருத்­து­வ­ரான டாக்­டர் டிஎஸ் கிளெர், "இத­யத்­துடிப்பு நின்­று­போ­ன­தால் அல்­லது மார­டைப்பு ஏற்­பட்டதால் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு­வ­ரப்­படும் நோயா­ளி­கள், பெரும்­பா­லும் அதி­கா­லை­யில் வரு­கின்­ற­னர்," என்று கூறி­னார்.

அதி­கா­லை­யில் உட­லில் ஒரு­வகை சுரப்­பு­நீர் வெளி­யி­டப்­ப­டு­வதே இதற்­குக் கார­ணம் என்­றார் அவர்.

"அதி­காலை 4 மணி­ய­ள­வில் நம் உட­லில் சைட்­டோ­கி­னின் எனப்­படும் சுரப்­பு­நீர் வெளி­வரு­கிறது. இத­னால் இத­யத்­து­டிப்பு மாற­வும் இத­யத்­து­டிப்பு நின்­று­போ­க­வும் சாத்­தி­யம் உள்­ளது," என்று அவர் சொன்­னார்.

மூத்த இதய நிபு­ண­ரான டாக்டர் நித்தி சதா நெகி, "பகல் வேளை­யில் நாம் விழிப்­பு­ட­னும் சுறு­சு­றுப்­பு­ட­னும் இயங்­கு­கி­றோம். நமது சக்­தி­யைப் பயன்­ப­டுத்­தி­விட்ட நிலை­யில், இரவு வேளை­யில் நாம் தூங்க தயா­ரா­கி­றோம். அதி­காலை வேளை­யில் ரத்த அழுத்­த­மும் இத­யத்­து­டிப்­பும் அதி­க­ரிக்­கிறது. இத­னால் அதி­கா­லை­யில் இத­யம் இயங்கும் முறை மாறக்­கூ­டும்," என்று கூறி­னார்.

பஞ்­சாப் மாநிலத்தின் லூதி­யானா நகரைச் சேர்ந்த டாக்­டர் எஸ்­எஸ் சிபியா, "அதி­காலை வேளை­யி­லும் தூக்­கத்­தின் கடை­சிக் கட்­டத்­தி­லுமே மார­டைப்­பும் இத­யம் தொடர்­பான பிரச்­சி­னை­கள் அனைத்­தும் ஏற்­படும் அபா­யம் அதி­கம்," என்­றார்.

நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம், புகைப்­ப­ழக்­கம் போன்­ற­வை­யும் இத­யத்­துக்கு அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். எனி­னும், முந்­தைய தலை­முறை­யி­ன­ரை­விட தற்­போ­தைய தலை­மு­றை­யி­ன­ருக்கு வாழ்­வில் முன்­கூட்­டியே இத­யப் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தாக நிபு­ணர்­கள் சொல்­கின்­ற­னர்.

சிறந்த இதய ஆரோக்­கி­யத்­துக்கு தின­மும் இரவு குறைந்­தது 7-8 மணி நேரம் தூங்­கு­வது முக்­கி­யம் என்று இதய நிபு­ணர்­கள் பரிந்­து­ரைக்­கின்­ற­னர். அதோடு மன­வு­ளைச்­ச­லைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­தும் ஆரோக்­கி­ய­மான உண­வு­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­பதும் அவ­சி­யம் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

இத­யத்­து­டிப்பு நின்­று­போ­வ­தற்­கும் மார­டைப்­புக்­கும் இடையே உள்ள வித்­தி­யா­சம் குறித்­தும் நிபு­ணர்­கள் தெளி­வு­ப­டுத்­து­கின்­ற­னர். இத­யத்­தின் ரத்த நாளத்­தில் அடைப்பு ஏற்­ப­டும்­போது மார­டைப்பு ஏற்­ப­டு­கிறது. மாறாக இத­யத்­து­டிப்பு நின்­று­போ­கும்­போது உட­லின் ஏனைய பகு­தி­க­ளுக்கு இத­யம் ரத்தம் அனுப்­பு­வ­தும் நின்­று­வி­டு­கிறது.

இத­னால் பாதிக்­கப்­படும் ஒரு­வர் இயல்­பாக மூச்­சு­வி­டு­வ­தும் நின்­று­வி­டு­கிறது. பொது­வாக மார­டைப்­பை­விட இத­யத்­து­டிப்பு நின்று­போ­வதே உயி­ருக்­கும் மேலும் ஆபத்­தா­னது எனக் கூறப்­ப­டு­கிறது.