'ஒவ்வொரு நொடியும் முக்கியம்'

'ஒவ்வொரு நொடியும் முக்கியம்'

2 mins read
a2bb6a11-3a5b-4d75-8a0d-13fde92fd196
கருத்தரங்கில் பங்கெடுத்தவர்கள், இதய இயக்கத்தை மீட்டெடுக்கும் சிகிச்சையையும் (சிபிஆர்) முதலுதவி செய்யவும் கற்றுக்கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாகனமோட்டிகள் அவசர நேரத்தில் வேகமாகச் செயல்பட வேண்டும்

விபத்து நிகழ்ந்த இடத்­துக்கு அவ­சர வாக­னங்­கள் விரை­யும்­போதோ வாகன தீ விபத்­தில் வாக­ன­மோட்டி சிக்­கிக்­கொள்­ளும்­போதோ அதி­லி­ருந்து உயி­ரைக் காத்­துக்­கொள்­வ­தில் ஒவ்­வொரு நொடி­யும் முக்­கி­யம்.

அத்­த­கைய சூழ்­நி­லை­யில் எப்­படி செயல்­ப­டு­வது என்­ப­தைத் தெரிந்­து­கொள்­வது அவ­சி­யம். ஏனெ­னில், வாழ்வா சாவா என்­பதை அது தீர்­மா­னிக்­கக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் மோட்­டார் வாகன சங்­கத்­தின் தலை­வர் பெர்­னர்ட் டே கூறி­னார்.

'சாலை­களில் அவ­சர சூழ­லுக்குத் தயார்­நிலை' எனும் கருத்­தரங்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. அதில் பேசிய திரு டே, வாக­ன­மோட்­டி­கள் உயிர்­காக்­கும் திறன்­க­ளைக் கற்­றி­ருப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அவர் வலி­யுறுத்­தி­னார்.

போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, சாலைப் பாது­காப்பு மன்­றம் ஆகி­யவை இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இக்­க­ருத்­த­ரங்­கில் 50க்கும் அதி­க­மான வாக­ன­மோட்­டி­களும் இந்த மூன்று அமைப்­பு­களைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் கலந்து­கொண்­ட­னர்.

வாகன தீ விபத்­து­களில் என்ன செய்­வது, தீயி­லி­ருந்து எப்­படி பாது­காப்­பாக தப்­பிப்­பது என்­பது பற்றி குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த மேஜர் டான் டியோ சாய், வாக­ன­மோட்­டி­க­ளுக்கு சொல்­லித் தந்­தார்.

இக்­க­ருத்­த­ரங்­கில் பங்­கெ­டுத்­த­வர்­கள், இதய இயக்­கத்தை மீட்­டெ­டுக்­கும் சிகிச்­சை­யை­யும் (சிபி­ஆர்) முத­லு­தவி செய்­ய­வும் கற்றுக்­கொண்­ட­னர்.

வாக­னம் சென்­று­கொண்­டி­ருக்­கும்­போதோ அது நக­ரா­மல் இருக்­கும்­போதோ அதில் தீ விபத்து ஏற்­ப­ட­லாம். வாகன இயந்­தி­ரம் அள­வுக்கு அதி­க­மாக சூடா­வது, மின்­சா­ரக் கோளாறு ஏற்­ப­டு­வது அல்­லது விபத்­துக்­குப் பிறகு வாக­னத்­தின் எரி­பொ­ருள் தொட்டி சேத­ம­டை­வது போன்ற கார­ணங்­க­ளால் வாகன தீவி­பத்து ஏற்­ப­டு­கிறது.

"தீவி­பத்­து­கள் அனைத்­தும் சிறி­ய­தா­கவே தொடங்­கு­கின்­றன. தீயைத் தொடக்­கத்­தி­லேயே அணைத்­து­வி­டு­வது மிக­வும் முக்­கி­யம். இல்­லா­விட்­டால், அது கட்டுக்­க­டங்­கா­மல் பர­வி­வி­டும். பின்­னர் அதை அணைப்­ப­தற்­குப் பெரிய முயற்சி தேவைப்­படும்," என்று மேஜர் டான் வலி­யு­றுத்­தி­னார்.

உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷால் இப்­ரா­ஹிம், இக்­க­ருத்­தங்­கில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

2020துடன் ஒப்­பி­டு­கை­யில், கடந்த ஆண்டு உயி­ரி­ழப்பை விளை­வித்த விபத்­து­க­ளின் எண்­ணிக்கை 25 விழுக்­காடு கூடி­ய­தாக போக்கு­வரத்­துக் காவல்­து­றை­யின் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­வ­தாக அவர் சொன்­னார்.