ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், மலாக்கா ஓர் அமைதியான மீன்பிடிக் கிராமமாக இருந்தது. ஆனால் ஒரே நூற்றாண்டிற்குள் மலாய் கலாசாரம், சமையற்கலை, கட்டடக்கலை ஆகிய பல்வேறு அம்சங்களும் பின்னிப் பிணைந்த மையமாக அது உருவெடுத்துள்ளது.
1500களில் இந்நகர் தென்கிழக்காசியாவின் முக்கிய வர்த்தக நடுவமாக விளங்கியதற்கும் மலாக்கா நதியும் அதன் துறைமுகமுமே முதன்மை காரணங்களாகும். இந்தக் கடலோர நகரை ரசிக்க நீங்கள் வரலாற்று ஆய்வாளராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
சிங்கப்பூரிலிருந்து நான்கு மணி நேர கார் பயணம் மேற்கொண்டால் மலாக்காவைச் சென்றடையலாம்.
யுனெஸ்கோ உலக மரபுடைமை அங்கீகாரம் பெற்ற மலாக்காவைக் காண ஒரு நாள் தேவை.
இப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல்கள், இந்துக் கோயில்கள், தாவோயிச புனிதத் தலங்கள், பௌத்த பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவை உள்ளன.

