லிட்டில் இந்தியாவில் கோலாகல தீபாவளி உலா

3 mins read
beb58224-dda4-40da-80f6-8b2b81992215
தீபாவளியை முன்னிட்டு இவ்வாண்டு முதன்முறையாக பேருந்து சவாரிகள் இடம்பெறும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 4

பேருந்துச் சவாரிகள், 'லேகோ' விளையாட்டு, பலகாரங்களைச் செய்துகாட்டும் சமையல் நிகழ்ச்சிகள் எனக் குடும்பங்களும் இளையர்களும் இவ்வாண்டு தீபாவளியைக் களிப்புடனும் குதூகலத்துடனும் கழிக்க இந்திய மரபுடைமை நிலையம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மாதங்கி இளங்­கோ­வன்

இவ்­வாண்டு தீபா­வ­ளியை முன்­னிட்டு முதன்­மு­றை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பேருந்து சவா­ரி­கள், தீபா­வளி ஒளி­யூட்டு அலங்­கா­ரங்­களை அரு­கி­லி­ருந்­த­படி பார்க்­க­வும் புகைப்­ப­டம் எடுத்­துக் கொள்­ள­வும் பொது­மக்­களுக்கு நல்ல வாய்ப்பை உரு­வாக்­கித் தர­வுள்­ளன.

இந்­திய மர­பு­டைமை நிலை­யம் தீபா­வ­ளிக்­காக, செப்­டம்­பர் 16ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 31ஆம் தேதி வரை ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் சிறப்பு நிகழ்ச்­சி­களில் இந்­தப் பேருந்து சவா­ரி­களும் அடங்­கும்.

சிராங்­கூன் ரோட்­டி­லும் ரேஸ் கோர்ஸ் ரோட்­டி­லும் இடம்­பெற்­றுள்ள தீபா­வளி ஒளி­யூட்டை திறந்த, பெரிய பேருந்­து­களில் சென்று பார்க்­க­லாம். இச்­ச­வா­ரி­கள் அக்­டோ­பர் மாதம் 1, 8, 15, 22 ஆகிய தேதி­களில் செயல்­படும்.

பேருந்­தில் மட்­டு­மல்­லா­மல், லிட்­டில் இந்­தி­யாவை 'ரிக்‌ஷா' வண்­டி­யி­லும் வலம் வர­லாம்.

இச்­ச­வா­ரி­கள் செப்­டம்­பர் 30ஆம் தேதி­யன்­றும் அக்­டோ­பர் 7, 14, 21 தேதி­க­ளன்­றும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை­ செ­யல்­படும்.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் களி­மண்­ணால் செய்­யப்­பட்ட எண்­ணெய் விளக்­கு­க­ளுக்கு சாயம் பூசும் பயி­ல­ரங்­கு­கள் அக்­டோ­பர் 15, 16 தேதி­களில் நடை­பெ­றும்.

இப்­ப­யி­ல­ரங்­கு­களில் பொது­மக்­கள் தங்­க­ளுக்கு பிடித்த வண்­ணங்­களில் எண்­ணெய் விளக்­கு­க­ளுக்கு சாயம் பூசி வீட்டை அலங்­க­ரிக்க அவற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம்.

தீபா­வ­ளிக்கு சிறப்பு உணவு வகை­களை ருசி­யா­கத் தயா­ரிக்­கும் செய்­மு­றை­க­ளைக் கற்­றுக்­கொள்ள அக்­டோ­பர் 16, 23 தேதி­களில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிபுணர்கள் தேவகி சண்­மு­க­மும் வசுந்­தரா ராம­சா­மி­யும் சமைத்துக் காட்­ட­வுள்­ள­னர்.

மண­ம­ணக்­கும் உணவை சமைக்க வேண்­டு­மா­னால் இந்நி­கழ்ச்­சிக்கு கட்­டா­யம் வரு­மாறு ஏற்­பாட்­டா­ளர்­கள் ஊக்­கு­விக்­கின்­ற­னர்.

'தீபா­வளி இன் எனி­மல் லேண்ட்', அதா­வது விலங்கு நிலத்­தில் தீபா­வளி எனும் கதை சொல்­லும் நிகழ்ச்­சியை நடத்த உள்ளது ஏ.கே.டி. கிரி­யே­ஷன்ஸ் அமைப்பு.

இசை, நாட­கம், பிள்­ளை­க­ளோடு உரை­யா­டும் அங்­கங்­கள் எனச் சுவை­யான, கவ­னத்தை ஈர்க்­கும் அம்­சங்­கள் இந்த ­நி­கழ்ச்­சி­யில் உண்டு. அக்­டோ­பர் 22ஆம் தேதி­யன்று இந்த நிகழ்ச்சி காலை 11.30 மணிக்­கும் பிற்­ப­கல் 2 மணிக்­கும் 3 மணிக்­கும் நடை­பெ­றும்.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் 'லேகோ' அடுக்­கு­க­ளால் செய்­யப்­பட்ட ரங்­கோலி கோலத்­தில் பொது­மக்­கள் 'லேகோ' துண்­டு­களைப் பொருத்தி முழு­மை­யாக்­க­லாம்.

அத­னு­டன், மர­பு­டைமை நிலை­யத்­துக்­குச் சென்று அழ­கிய புகைப்­ப­டங்­களை எடுத்து சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய் பவர்­கள் இல­வச தீபா­வளி அன்­ப­ளிப்பு உறை­களை எடுத்­துக்­கொள்­ள­லாம். இந்­திய மர­பு­டைமை நிலை­யத்தை 'டேக்' செய்­தால் போதும், வண்­ண­மிக்க உறை­க­ளைத் தாரா­ள­மா­கப் பெற­லாம்.

பெரிய பேருந்து சவா­ரி­க­ளுக்கு அல்­லது 'ரிக்‌ஷா' வண்டி சவாரி களுக்கு செல்ல விரும்­பு­வோர் $10 கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

சவாரிகளுக்குப் பதிந்­து­கொள்­ள­வும் மற்ற நிகழ்ச்­சி­கள் பற்­றிய மேல்­வி­வ­ரங்­க­ளுக்­கும் கட்­ட­ணத் தக­வல்களுக்­கும் https://ihc-programmes.peatix.com/ என்ற இணை­யப் பக்­கத்தை நாட­லாம்.