தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக ஞாபகமறதி தினத்தை ஒட்டி ஒளியூட்டப்பட்ட உள்ளூர் கட்டடங்கள்

1 mins read
ba77219f-03a2-4122-b0d3-4b34285a8f68
நினைவாற்றல் இழப்பை குறிக்க ஊதா நிறத்திலும் ஆக்ககரமான நிலைப்பாட்டை குறிக்க மஞ்சள் நிறத்திலும் மிளிர்ந்த தேசிய விளையாட்டரங்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலக ஞாபகமறதி (அல்­ஷை­மர்) தினத்தை ஒட்டி, சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற ஐந்து கட்­ட­டங்­கள் ஊதா, மஞ்­சள் ஆகிய நிறங்­களில் ஒளி­யூட்­டப்­பட்­டன.

எஸ்­பி­ள­னேட் அரங்­கம், சிங்­கப்­பூர் ராட்­டி­னம், மரினா பே சேண்ட்ஸ், தேசிய விளை­யாட்­ட­ரங்­கம்,, சிங்­கப்­பூர் தேசிய காட்­சிக்­கூ­டம் ஆகி­யவை அவை.

பொது­மக்­க­ளி­டையே, 'டிமென்­ஷியா' எனப்­படும் நினை­வாற்­றல் இழப்பு, வழக்­க­மாக அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய ஞாபகமறதி நோய் ஆகி­யவை குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது இந்த ஒளி­யூட்­டுக்­கான நோக்­கம். சமூக சேவை அமைப்­பான 'டிமென்­ஷியா சிங்­கப்­பூர்' இதற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இத­னால் பாதிக்­கப்­பட்­டோர், அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள், குடும்­பத்­தி­னர், சுகா­தா­ரத்­து­றை­யி­னர், சமூக சேவை­யா­ளர்­கள் ஆகி­யோ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வாய்ப்­பாக இதனை ஏற்­பாடு செய்­த­தாக அமைப்பு கூறி­யது.