தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழாவைக் கடந்த 18ஆம் தேதியன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஒரு கலந்துரையாடல் கூட்டமாகக் கொண்டாடியது.
ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கு பெரியாரின் வருகையால் தமிழர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அவரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பற்றியும் வந்திருந்தோர் கலந்துரையாடினார்கள்.
மாணவர்கள், இளையர்கள், அமைப்புகளின் தலைவர்கள் எனப் பலரும் வருகை அளித்திருந்தனர்.
தந்தை பெரியாரை நேரில் சந்தித்த அனுபவப் பகிர்வு, பெரியாரின் சிறப்புகளைப் பாராட்டும் மூன்று கவிஞர்களின் கவிதை வாசிப்பு ஆகிய அங்கங்கள் இடம்பெற்றன.
பெரியாரைப் பற்றி பேசிய பள்ளி மாணவர்கள் சிலருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
செய்தி/படம்: ஏற்பாட்டுக்குழு