புத்தாக்க இந்திய கலையகம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதியன்று நடைபெற்றது.
விளையாட்டுகள், பாடல்கள், கருத்தாடல் எனப் பல்வேறு அங்கங்களில் வந்திருந்த சுமார் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடந்த இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் சி. குணசேகரன், தாம் கடந்துவந்த பாதையில் பெற்ற அனுபவங்கள், செயற்குழு உறுப்பினர்கள் துணையுடன் இணையம் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள்வழி அடைந்த வெற்றிகள் ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்தார்.
அமைப்பின் கலை வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அங்கீகாரமும் வழங்கிவரும் தேசிய கலைகள் மன்றம், வளர்தமிழ் இயக்கம், கற்றல் கற்பித்தல் குழு, தமிழ் முரசு, சமூக ஊடகக் கலைக் குழுக்கள் என அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக DigitalartsTV எனும் யூடியூப் ஒளியலை அறிமுகம் கண்டது. இதற்கான இணைப்பு: https://youtube.com/channel/UCLCr5rTIcxtk0UM65lq_W9g
செய்தி/படம்: ஏற்பாட்டுக்குழு

