மேடையில் உயிர்பெற்று மிளிர்ந்த 'சிவகாமி'

மேடையில் உயிர்பெற்று மிளிர்ந்த 'சிவகாமி'

2 mins read
3f100375-7abf-44a2-aadd-69478c328c4b
மேல்படம்: தொடக்கக் காட்சியில் 'முன்னம் அவன் நாமம்' பாடலுக்கு ஆடிய சிவகாமி கதாபாத்திரம். புத்த பிக்குவாக மாறுவேடம் பூண்டிருந்த நீலகேசியும் பல்லவ இளவரசர் மாமல்லனும் மோதிக் கொள்ளும் காட்சி.படங்கள்: அவாண்ட் நாடகக்குழு -
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

காதலா மக்­களா என்ற உள்­ளப்­

போ­ரும் வாதா­பிப் பெரும் போரும் உயிர்­பெற்ற 'சிவ­காமி' மேடை

நாட­கம் பிரம்­மாண்­ட­மான முறை­யில் அரங்­கே­றி­யது.

அவாண்ட் நாட­கக்­குழு படைத்த சிவ­காமி, ஆடல், பாடல் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி பார்­வை­யா­ளர்­களை ஈர்த்­தது.

இந்­நா­ட­கம், கல்கி கிருஷ்­ண­மூர்த்­தி­யின் பிர­பல 'சிவ­கா­மி­யின் சப­தம்' நாவ­லைத் தழு­வி­யி­ருந்­தது.

பிர­தான கதா­நா­ய­கி­யான சிவ­கா­மி­யின் வேட­மிட்ட நட­ன­மணி மீரா பால­சுப்­ர­ம­ணி­யன், தனது

நட­னங்­க­ளி­லும் அபி­ந­யங்­க­ளி­லும் சிவ­கா­மி­யின் காதலை, விரக்­தியை அழ­காகக் காட்­டி­னார்.

'முன்­னம் அவன் நாமம் கேட்­டேன்' எனத் தொடங்கி மொத்­தம் மூன்று பாடல்­க­ளைக் குழு­வி­னர் படைத்­த­னர்.

மகா­கவி பார­தி­யின் கொள்­ளுப்­பே­ரன், திரு ராஜ்­கு­மார் பாரதி உட்­பட மூன்று இசை­ய­மைப்­பா­ளர்­

க­ளின் கலை­வண்­ணத்­தால் ஏழாம் நூற்­றாண்­டில் இருந்த தமி­ழ­கச் சூழல் மேடை­யில் உயிர்­பெற்­றது.

பல்­லவ, சாளுக்­கிய மன்­னர்­

க­ளாக வேட­மிட்­டோர் எல்லாக் காட்­சி­க­ளி­லும் கம்­பீ­ரம் மாறாது நடித்­தி­ருந்­த­னர்.

குறிப்­பாக, புலி­கே­சி­யா­க­வும் புத்த பிக்­கு­வாக மாறு­வே­டம் பூண்­டி­ருந்த நீல­கே­சி­யா­க­வும் நடித்­தி­ருந்த விம­லன் இளங்­கோ­வன், குணத்­தில் வேறு­பட்ட இரு கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் திறம்­பட கையாண்­டி­ருந்­தார்.

நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்

­க­ளின் வேடிக்­கை­யான

உடல்­மொ­ழி­யும் பாவ­னை­களும் நாட­கத்தை மேலும் மெருகூட்டின.

ஏறக்­கு­றைய இரண்டு மணி நேரம் நீடித்த சிவ­காமி ஆங்­காங்கே தொய்­வுற்­றி­ருந்­தபோதிலும் முக்­கி­ய­மான கட்­டங்­களில் அது

விறு­வி­றுப்­பா­கவே இருந்­தது.

கண்­ணைப் பறிக்­கும் திரை

­ஓ­வி­யங்­கள், மேடை ஒளி­ய­மைப்பு ஆகி­யவை நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­தோரை மகிழ்­வூட்­டி­ன.

கேட்வே திரை­ய­ரங்­கில் இம்மாதம் 16ஆம், 17ஆம் தேதிகளில் சி­வ­காமி நாட­கம் அரங்­கே­றி­யது. 2007ல் அரங்­கே­றிய 'சிவ­காமி' என்­னும் நாட்­டிய நாட­கத்தை ஆங்­

கி­லத்­தில் இயக்­கிய அவாண்ட்

நாட­கக்­கு­ழு­வின் இயக்­கு­நர் திரு

க. செல்வா, நீண்ட நாள்­க­ளாய் அந்­நா­ட­கத்தை தமி­ழில் மேடை­யேற்­றும் ஆவல் கொண்­டி­ருந்­த­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார்.

அந்­நா­ட­கத்­தின் ஆங்­கில வச­னங்­க­ளைத் தமி­ழாக்­கம் செய்­தும் நாவ­லின் போக்­கோடு மேலும் ஒத்­தி­சைவு இருக்­கும்­ப­டி­யாக தமிழ் வச­னங்­களை அமைத்­தும் கொடுத்த திரு ஸ்ரீ­க­ணேஷ், ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பக்­கங்­க­ளைக் கொண்ட காப்­பி­யத்தை நூறு பக்க வச­னங்­

க­ளுக்­குள் எழு­து­வதை ஒரு முக்­கிய சவா­லாக குறிப்­பிட்­டார். கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிவ­காமி நாட­கத்­துக்­கான தொடக்க வேலை­கள் ஆரம்­ப­மா­கி­இருந்­தன. இந்­திய சுதந்­திரப் போராட்­டம் முடி­வ­டைந்த சம­யத்­தில் வெளி­வந்­தது 'சிவ­கா­மி­யின் சப­தம்' நாவல். சிவ­காமி வாதா­பி­யி­லி­ருந்து மீண்டு வந்­ததை இந்தியாவே சுதந்­தி­ரம் அடைந்­த­தாக கருதி அன்­றைய மக்­கள் மகிழ்ச்­சி­ய­டைந்த அனு­ப­வங்­களைப் பலர் கூற

கேட்­டுள்­ள­தா­க­வும் திரு ஸ்ரீக­ணேஷ் தெரிவித்தார்.