உலகளாவிய உணவுப் பழக்கம் 30 ஆண்டுகளில் மிகச் சிறிய முன்னேற்றம் மட்டுமே கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நேச்சர் ஃபுட் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு இதைத் தெரிவித்தது. கடந்த 1900ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, 185 நாடுகளைச் சேர்ந்தவர்களின் உணவுப் பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது.
உலகளாவிய மாற்று உணவுப் பழக்கக் குறீயிடு 30 ஆண்டுகளில் 1.5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்ததாக ஆய்வு கூறியது.
அத்துடன், மோசமான உணவுப் பழக்கம், உலகில் தடுக்கக்கூடிய 26 விழுக்காட்டு மரணங்களுக்குக் காரணமாய் உள்ளதாக ஆய்வு கண்டறிந்தது.
சில வகை மக்களின் உணவுப் பழக்கம் மட்டுமே மேம்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பணக்கார நாடுகளில் உள்ளவர்களின் உணவுப் பழக்கத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. ஏழைகளின் உணவுப் பழக்கம் தேக்கம் அடைந்தது.
உணவும் உலகமயமாகிவிட்டதால், முன்னர் கிடைக்காத உணவு கள் இப்போது எளிதாகக் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
ஆனால், அவற்றுடன் சேர்த்து உடலுக்கு நன்மை பயக்காத பதப் படுத்தப்பட்ட உணவும் பரவலாகிவிட்டதையும் அவர்கள் சுட்டினர்.
அது மட்டுமல்லாது, உணவுப் பழக்கம் பண்பாடு சார்ந்தது என்றும் சில உணவு வகைகள் நம் உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிட்டு வேறு நலமிக்க உணவு வகை களுக்கு மாறுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.