நிதித் திறன்: இன்றே தொடங்கவேண்டும்

நிதித் திறன்: இன்றே தொடங்கவேண்டும்

4 mins read
72c1bd7e-7eb0-4d18-9028-fd443690c586
ஓய்வு காலத்துக்குத் தயாராய் ஆவது பற்றிய குறிப்புகளைத் தந்த நிதி நிபுணர்கள் (இடமிருந்து வலம்) லோர்னா டான், வீ. மகேந்திரன், தினேஷ் தயானி, மோகன் ஆகியோர். படம்: ஜெரமையா லோய் -

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் நிதி அறி­வுத்­தி­றனை வளர்த்­துக் கொள்­ள­வும் ஓய்­வு கா­லத்­துக்­குத் தேவை­யான சேமிப்பு, மருத்­து­வக் காப்­பீடு, முத­லீடு போன்­ற­வற்­றைப் பற்றி மேலும் அறிந்­து­கொள்­ள­வும் உத­வும் நோக்­கத்­து­டன் 'மனி­ஐ­டி­யாஸ்' நிதி அறிவுத்­தி­றன் கருத்­த­ரங்கு நடை­பெற்­றது.

கடந்த சனிக்­கி­ழமை 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மையத்­தின் அரங்­கத்­தில் 'மனி­ஐ­டி­யாஸ்' கருத்­த­ரங்கு இடம்­பெற்­றது.

நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்ட அந்­நி­கழ்ச்­சி­யில் பல்­லின நிதி நிபு­ணர்­கள், சமூக ஊழி­யர்­கள், ஆலோ­ச­கர்­கள் உள்­ளிட்ட பேச்­சா­ளர்­கள் நிதி சார்ந்த பல குறிப்­பு­களைப் பகிர்ந்துகொண்­ட­னர்.

மருத்­து­வச் செல­வு­கள், முத­லீ­டு­கள், ஓய்­வுக்­கா­லம் ஆகி­ய­வற்­றுக்­குத் எவ்­வாறு திட்­ட­மி­ட­லாம், பெண்­கள் எவ்­வாறு சுய­மாக நிதி சார்ந்த முடி­வு­களை எடுக்­க­லாம் என்பன உள்­ளிட்ட பல்­வேறு தலைப்பு­கள் குறித்து வெவ்­வேறு அமர்­வு­களில் நிபு­ணர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர். எம். பி. செல்­வம் நிதி ஆலோ­ச­கர்­கள் அமைப்பு ஏற்­பாடு செய்த நிகழ்ச்சிக்கு நிதி அறிவுத் திறன் கழ­கம் ஆத­ரவு தந்­தது.

மூப்­ப­டை­யும் மக்­கள் எதிர்­கொள்ளக்கூடிய நிதிச் சவால்­கள், மருத்­து­வச் செல­வு­கள் போன்­ற­வற்றை சமா­ளிக்க உத­வும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்­பின் நிதி­யு­தவித் திட்­டங்­கள், மானி­யங்­கள் போன்­ற­வற்றை தெரிந்து­கொள்­ளும்­படி சிண்­டா­வில் பணி­யாற்­றும் சமூக சேவை ஊழி­யர் அமுதா செல்­லய்யா பங்­கேற்­பா­ளர்­களை ஊக்­கு­வித்­தார். ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்­பின் தகுதி வரம்­பிற்­குள் வரா­த­வர்­கள் சிண்­டா­வின் நிதி­யு­தவித் திட்­டங்­களை நாட­லாம் என்­றார் அவர்.

பெண்­க­ளின் நிதி முடி­வு­கள் குறித்த அமர்­வில், தங்­கள் பணத்­தைப் பற்­றிய முடி­வு­களை எடுக்­கும் சுதந்­தி­ரம் பெண்­க­ளுக்கு இருக்­க­வேண்­டிய அவ­சி­யத்தை நிபு­ணர்­கள் வலி­யு­றுத்­தி­னர். மேலும், ஆண்­க­ளை­விட பெண்­க­ளின் ஆயுள்­கா­லம் அதி­கம் என்று புள்ளி­வி­வ­ரங்­கள் கூறு­­வதை சுட்­டிய அவர்­கள், அத­னால் வருங்­கா­லத்­தில் தங்­க­ளைப் பேணிக்­கொள்ள பெண்­கள் முன்­கூட்­டியே திட்­ட­மிட வேண்­டும் என்­ற­னர்.

பல­நாள் கழித்து வேலைக்­குத் திரும்­பும் பெண்­கள், 'கிக் எகா­னமி' எனப்­படும் விரும்­பிய நேரத்­தில் தற்­கா­லி­கப் பணி­க­ளைச் செய்து வரு­மா­னத்தை ஈட்­டு­வது பற்றி பரி­சீ­லிக்­க­லாம் என்று 'ஸ்டே­ஷவே' எனும் முத­லீட்டு நிறு­வ­னத்­தின் தலைமை செயல்­பாட்டு அதி­காரி நந்­தினி ஜோஷி ஆலோ­சனை வழங்­கி­னார்.

வேலைக்­குத் திரும்­பும் பெண்­கள் 'ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர்' பயிற்சி உதவி நிதியை பயன்­ப­டுத்தி தங்­கள் திறன்­களை மேம்­ப­டுத்­த­லாம் என்று டிபி­எஸ் வங்­கி­யின் முத­லீட்­டுத் துறைத் தலை­வர் லோர்னா டான் பரிந்­து­ரைத்­தார்.

அத­னு­டன், செல­வு­களைக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­துக்­கொள்ள வரவு செலவுத் திட்­டம் ஒன்றை வகுத்துக் கொள்­ளும்­படி நிபு­ணர்­கள் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­னர்.

"பெண்­கள், குறிப்­பாக அண்­மை­யில் வேலை பார்க்க தொடங்­கி­யுள்ள இளம்பெண்­கள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே சேமிப்­புத் திட்­டத்­தை­யும், முத­லீட்டுத் திட்­டத்­தை­யும் உரு­வாக்­கு­வது குறித்து சிந்­திக்க வேண்­டும்," என்று இளம் நிதி ஆலோ­ச­கர் டி சங்­கீதா கூறி­னார்.

இதன் மூலம், கூடு­தல் செலவு­க­ளை­யும் குடும்பப் பொறுப்­பு­க­ளை­யும் கையா­ளும் பெண்­கள் தங்­க­ளது நிதியைச் சிறந்த முறை­யில் கையாளவும் வரு­மா­னம் ஈட்டவும் தொடக்­கத்­தி­லேயே கற்­றுக் கொள்­ள­லாம் என்­றார் அவர்.

இன்­றைய குழப்­ப­மான அர­சி­யல், பொரு­ளி­யல் சூழ­லில் சரி­யான முத­லீ­டு­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் கூடு­தல் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் கருத்­த­ரங்­கில் வலியுறுத்தப்பட்டது.

சேமிப்­பு­களை முழு­வ­து­மாக முத­லீடு செய்­வதைவிட, இழந்­தா­லும் ஈடு­கட்­டக்கூடிய தொகையை மட்­டுமே முத­லீடு செய்­யும்­படி நிபு­ணர்­கள் அறிவுறுத்தினர்.

அதே­போல, முத­லீட்டு அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள், முத­லில் சிறிய தொகை­யில் தொடங்­க­லாம் என்­றும் முத­லீடு செய்­யும்­போது ஒரு திட்­டத்­தை­யும் இலக்­கை­யும் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

கருத்­த­ரங்­கிற்கு கண­வ­ரு­டன் வந்­தி­ருந்த திரு­மதி அமுதா, போதிய சேமிப்பு, மருத்­து­வக் காப்­பு­றுதி, வரவு செல­வுத் திட்­ட­மி­டு­தல் போன்­ற­வற்றை ஏற்­க­னவே செயல்படுத்தி வந்­தா­லும் கருத்­த­ரங்­கில் ஏன் உயில் எழு­த­வேண்­டும் என்­ப­தன் அவ­சி­யத்தைப் புதி­தாக அறிந்­து கொண்­ட­தாக கூறி­னார்.

தங்­க­ள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களுக்கு தங்­க­ளது உடை­மை­கள் எளி­தா­கச் சென்று சேர்­வது முக்­கி­யம் என்­பதைப் புரிந்­து­கொள்ள இது உத­வி­ய­தா­க­ அவர் குறிப்­பிட்­டார்.

'எல்­டர்­ஷீல்ட்', 'கேர்­ஷீல்ட்' போன்ற திட்­டங்­கள் குறித்து புதுத் தக­வல்­கள் கிடைத்­த­தா­கக் கூறிய திரு வெற்­றி­வே­லன், குறிப்­பாக 'கேர்­ஷீல்ட்' திட்­டத்­தில் வாழ்­நாள் வரை காப்­பு­றுதி இருக்­கும் என்­பது ஆர்­வத்­தைத் தூண்­டி­ய­தா­கச் சொன்­னார். அதோடு, "முத­லீ­டு­கள் பற்றி மேலும் விவ­ர­மா­கத் தெரிந்து­ கொள்­ள­வும் மோச­டி­க­ளைத் தவிர்க்­கும் வழி­க­ளை­யும் கற்­றுக்­கொள்ள கருத்­த­ரங்கு வாய்ப்­பாக இருந்­தது," என்­றார்.

வருங்­கா­லத்­தில் தன் மக­ளுக்கு சுமை­யாக இருந்­து­விடக் கூடாது என்ற உறு­தி­யு­டன் இருக்­கும் திரு­மதி புஷ்­ப­ராணி, 57, "முதி­யோர் இல்­லங்­க­ளுக்கு ஆயி­ரக்­க­ணக்­கில் செல­வா­கும் என்­பது இங்­கு பேசிய நிபு­ணர்­கள் கூறித்­தான் எனக்­குத் தெரி­யும். ஆக, என் ஓய்­வுக் காலத்­திற்­குத் தயா­ரா­வ­தில் நான் இன்­னும் தீவிர கவ­னம் செலுத்த வேண்­டும் என்­பதை உணர்ந்தேன்," என்று சொன்னார்.

போதிய ஆயத்­த­மும் பிள்­ளை­ க­ளின் ஆத­ர­வும் தமது முதுமைக் காலத்தை நிம்­ம­தி­யாகச் செல­விட உதவி வரு­வ­தாக கூறிய 87 வயது திரு­வாட்டி மோகனா, கருத்­த­ரங்கில் கலந்­து­கொள்ள சக்­கர நாற்­கா­லி­யில் ஆர்­வத்­து­டன் வந்­தி­ருந்­தார்.

கருத்­த­ரங்­கில் பேசப்­பட்ட தலைப்பு­கள் மீது தமக்கு ஆர்­வம் அதி­கம் என்று கூறிய அவர், இது­போன்ற தக­வல்­க­ளைத் தெரிந்து கொள்ள நிதி நிகழ்ச்­சி­களில் இளை­யர்­கள் இன்­னும் அதி­க­மாக கலந்து­கொண்டு தங்­கள் நிதித் திற­னை வளர்த்­துக்கொள்ள வேண்­டும் என்று விரும்­பு­வ­தா­கவும் அவர் சொன்னார்.