அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்படும் போட்டியின் இறுதி நாள் நீட்டிப்பு

2 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் முன்­னாள் தலை­வர் அம­ரர் சுப. அரு­ணா­ச­லம் நினை­வாக அவ­ரின் குடும்­பத்­தா­ரது நிதி­யா­த­ர­வு­டன் 'சூழ­லுக்­குப் பாடல் எழு­தும் போட்டி' முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதற்­கான இறுதி நாள் அடுத்த மாதம் 7ஆம் தேதி­வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

போட்­டி­யில் கலந்­து­கொள்ள விரும்­பு­வோர், http://singaporetamilwriters.com/suba எனும் இணைப்­பு­வழி கூகல் படி­வத்­திற்­குச் சென்று அதனை நிரப்­பிப் பாடல்­க­ளு­டன் அனுப்ப வேண்­டும்.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­தோ­றும் நடத்­தும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழாவை ஒட்டி இந்­தப் போட்டி நடத்­தப்­ப­டு­கிறது. சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பை­யும் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் வலி­யு­றுத்தி சிங்­கப்­பூர் சூழ­லில் பாடல் வரி­கள் அமைய வேண்­டும்.

ஒரு­வர் அதி­க­பட்­சம் மூன்று பாடல்­கள் அனுப்­ப­லாம். ஒரு பல்­லவி மற்­றும் நான்கு சர­ணங்­கள் இருக்க வேண்­டும். ஒவ்­வொன்­றி­லும் நான்கு வரி­க­ளென மொத்­தம் 20 வரி­கள் மட்­டுமே இருக்க வேண்­டும். சிங்­கப்­பூர்க் குடி­யு­ரிமை பெற்­ற­வர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் போட்­டி­யில் பங்­கேற்­க­லாம்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு திரு. நா. ஆண்­டி­யப்­பன் 97849105; திரு. சு. முத்­து­மா­ணிக்­கம் 96753215; திரு­வாட்டி கிருத்­திகா kiruthikavirku@gmail.com, திரு. கோ. இளங்­கோ­வன் 91216494; திரு­வாட்டி மலை­ய­ரசி 97826039 ஆகி­யோ­ரைத் தொடர்பு கொள்­ள­லாம், அல்­லது இணை­யத் தளத்தை நாட­லாம்.

நடு­வர்­க­ளால் தேர்வு செய்­யப்­படும் மூன்று பாடல்­க­ளுக்­குப் பரி­சு­கள் வழங்­கப்­படும். இதன்­படி முதல் பரி­சாக 300 வெள்­ளி­யும் இரண்­டாம் பரி­சாக 250 வெள்­ளி­யும் மூன்­றாம் பரி­சாக 150 வெள்­ளி­யும் வழங்­கப்­படும்.

முதல் பரிசு பெறும் பாடல் இசை­ய­மைக்­கப்­பட்டு கண்­ண­தா­சன் விழா­வில் ஒலி­ப­ரப்­பப்­படும்.