தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எழுத்தாளர் கழகத் தலைவருக்கு 'சிங்கை எழுத்துச் சிற்பி' பட்டம்

1 mins read
8bd5c063-4162-45fb-a82a-d80f76c0f151
(இடமிருந்து) பேராசிரியர் திண்ணப்பன், திரு ஆண்டியப்பன், டத்தோஸ்ரீ எம். சரவணன், திரு இரா. தினகரன், திரு சு. முத்து மாணிக்கம். படம்: நாதன் ஸ்டூடியோ -

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­ப­னுக்­குச் 'சிங்கை எழுத்­துச் சிற்பி' பட்­டம் வழங்­கப்­பட்­டி­ருக்­கிறது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற அவ­ரது பவள விழா­வில் அந்­தப் பட்­டம் வழங்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கச் சார்­பு­நி­லைப் பேரா­சி­ரி­யர் சுப. திண்­ணப்­பன் உள்­ளிட்ட விழா ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் அந்­தப் பட்­டத்தை வழங்­கி­னர்.

ஏற்­புரை ஆற்­றிய திரு. ஆண்­டி­யப்­பன் தமது இலக்­கிய, பொதுச் சேவை வளர்ச்­சிக்­குக் கார­ணம் எழுத்­தா­ளர் கழ­கம் என்று கூறி­னார். அத்­து­டன் 1990களில் எழுத்­தா­ளர் கழ­கத்­தில் இணைந்து பணி­யாற்ற வாய்ப்பு வழங்­கிய அப்­போ­தைய தலை­வர் கவி­ஞ­ரேறு அம­ல­தா­சன், துணைத் தலை­வர் திரு வை. சுதர்­மன், செய­லா­ளர் பாத்­தே­றல் இள­மா­றன் ஆகி­யோ­ருக்­கும் அவர்­க­ளி­டம் தம்மை அறி­முகப்­ப­டுத்­திய திரு பொன். சுந்­த­ர­ரா­சு­விற்­கும் நன்றி தெரி­வித்­தார்.

எழுத்­தா­ளர் கழ­கம் சவால்­களை­யும் சிக்­கல்­க­ளை­யும் சந்­தித்­த­போது உதவி செய்த போப் ராஜூக்­கும் அவர் நன்றி தெரி­வித்­தார்.