சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் காப்பிய விழா, வரும் 16ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நிகழ உள்ளது.
இவ்வாண்டு மகாபாரதம் குறித்த சிந்தனைகள் இடம்பெறும். நிகழ்வில் இளங்கோவடிகள் விருது வழங்கப்படவிருக்கிறது. சிற்றுரையாக 'விதுரன் மேன்மை' என்ற தலைப்பில் கண்ணன் சேஷாத்ரியும் 'சூதும் வாதும்' என்னும் தலைப்பில் புதுச்சேரி பேராசிரியர் நா இளங்கோவும் உரையாற்றுவர்.
சிறப்பு விருந்தினராக இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத்தலைவர் இரா. தினகரன் கலந்துகொள்கிறார்.

