தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செட்டியார் கோயில் குழுமத்தின் ஏற்பாட்டில் நடந்தேறிய மெதுநடை ஓட்டம்

2 mins read
5cc7fa08-3ab4-48e3-92ae-fe6c015cead7
சக்கர நாற்காலியைப் பெற்றவர்களுடன் ஆலய மேலாண்மைக் குழு உறுப்பினர்கள். செய்தி, படம்: செட்டியார் கோயில் குழுமம் -

செட்­டி­யார் கோயில் குழு­மம் இம்மாதம் 2ஆம் தேதி ஏற்­பாடு செய்­தி­ருந்த மெது­நடை ஓட்­டத்­திற்கு முன்­ன­தாக ஆயத்த உடற்­பயிற்சி இடம்­பெற்­றது.

ஏறத்தாழ 500 பேர் கலந்­து­கொண்ட மெது­நடை ஓட்­டம், காலை 7.30 மணி­ய­ள­வில் தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயில் வளா­கத்­தி­லி­ருந்து தொடங்கி ரிவர்­வேலி ரோடு, சிங்கப்பூர் ஆற்­றங்­கரை வழி­யாக சென்று மீண்­டும் தேங் ரோட்டில் முடிவுற்றது.

மெது­நடை ஓட்­டத்தை சுவா சூ காங்­கில் உள்ள தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மேற்கு கல்­லூ­ரி­யின் உடற்­கல்வி விரி­வு­ரை­யா­ளர் எஸ்.ராம­சாமி வழி­ந­டத்­தினார்.

மெது­நடை ஓட்­டம் தொடங்­கிய சிறிது நேரத்­தில் மழை வந்­து­விட்­டது. அதை எதிர்­பார்த்த ஏற்­பாட்­டா­ளர்­கள் அனைத்து பங்­கேற்­பாளர்­க­ளுக்­கும் மழை அங்­கியை வழங்­கி­னர். அனை­வ­ரும் அதை அணிந்து மெது­நடை ஓட்­டத்­தைத் தொடர்ந்­த­னர்.

பல இன சமு­தா­யத்­தைச் சேர்ந்த மூத்த குடி­மக்­கள் பல­ரும் மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தாது ஆர்­வத்­து­டன் கலந்­து­கொண்­டது நிகழ்ச்­சிக்குப் பெருமை சேர்த்­தது.

தொடர்பு, தக­வல் மற்­றும் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

ஆலய மேலாண்­மைக் குழு­வின் தலை­வர் சண்­மு­கம் தமது வர­வேற்பு­ உரை­யில், பல இன சமு­தா­யத்­திற்கு ஆல­யம் அறப்­ப­ணி­கள் செய்து வரு­வது குறித்துப் பேசி­னார்.

பல இன சமு­தா­யத்­தி­ன­ரும் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டது வர­வேற்­கத்­தக்­கது என்­றார் அவர்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆல­யம் இந்தச் சமூக நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்து நடத்­தி­ வ­ரு­கிறது என்­றும் உதவி தேவைப்­படும் பிற தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் தொடர்ந்து நன்­கொடை அளித்து வரு­கிறது என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

உடற்குறையுள்ள அறு­வ­ருக்கு இவ்வாண்டு இயந்­திர சக்­கர நாற்­கா­லி­கள் வழங்­கப்­பட்­டன.

இயந்­திர சக்­கர நாற்­காலி கிடைப்­ப­தற்குமுன், இவர்கள் வெளி­யில் செல்­வ­தற்கு மற்ற ஒரு­வ­ரின் உத­வியை நாட­வேண்டியிருந்­தது. ஆனால், இனி அடுத்­த­வ­ரின் துணை­யின்றி வெளி­யில் சென்று வர சக்­கர நாற்­காலி உத­வி­யாக இருக்­கும் என்று அவர்கள் கூறி­னர்.

மெது­நடை ஓட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகள், டீ-சட்டை, அதிர்ஷ்­டக் குலுக்­கல் பரி­சு­கள் ஆகி­யவை வழங்கப்பட்டன.

சிங்கப்பூரின் ஆரோக்­கிய வாழ்க்கை­முறை திட்­டத்தை ஒட்­டி­யும் உடல்­ந­லத்­தைப் பேணும் கருத்தை வலி­யு­றுத்­தி­யும் நடத்­தப்­பட்ட இந்­நி­கழ்ச்­சிக்கு பொது­மக்களிடம் நல்ல வர­வேற்பு கிடைத்­தது.