வேலை, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் சேவை

வேலை, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் சேவை

2 mins read
5c997ed1-e2e2-467d-a7b7-81459c1ba56a
நிகழ்ச்சியில் உரையாற்றிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங். படம்: சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு -

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு தொண்­டூ­ழிய தொழில் ஆலோ­ச­கர்­கள் ஒருங்­கி­ணைப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த வாரம் நடத்­தி­யது.

வலு­வான தொழில்­முறை வலை­ய­மைப்பு, செயல்­தி­றன் மிக்க தக­வல் தொழில் திட்­ட­மி­டல் போன்­றவை பற்றி எடுத்­து­ரைக்­க­வும் தொழில் வளங்­களை சிறந்த முறை­யில் அணு­கு­வது பற்றி எடுத்­து­ரைக்­க­வும் தொழில் விருப்­பங்­களை மறு­ம­திப்­பீடு செய்து புதிய பத­வி­கள் அல்­லது துறை­களில் வேலைவாய்ப்­பு­களை தேடு­ப­வர்­க­ளுக்கு வழி­காட்­ட­வும் இந்நிகழ்ச்சி அரங்­கே­றி­யது.

தொண்­டூ­ழிய தொழில் ஆலோ சகர்­கள் ஒருங்­கி­ணைப்பு நிகழ்ச்சி தனி­ந­பர்­க­ளுக்கு, குறிப்­பாக 40 வய­தி­லி­ருந்து 50 வய­து­டைய அனு­பவ தொழி­லா­ளர்­க­ளுக்கு, ஆத­ரவு மற்­றும் தொழில் வழி­காட்­டு­தலை வழங்­கு­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது.

தங்­கள் வாழ்க்­கையை முன்­னேற்­று­வ­தற்­கும் பிற வேலை­க­ளுக்கு மாறு­வ­தற்­கும் விரும்­பும் நபர்­க­ளுக்கு தொழில்­முறை வழி களை­யும் ஆலோ­ச­கர்­கள் மூலம் வழி­காட்­டு­த­லை­யும் இந்த முயற்சி வழங்கி வரு­கிறது.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டம் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற இந்

­நி­கழ்ச்­சி­யில் மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்­தக, தொழில்­ இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் டான் சீ லெங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்­றார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வ­லின்­போ­தும் துடிப்­பு­டன் செயல்­பட்ட சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு, 9 துறை­க­ளைச் சார்ந்த 300 ஆலோ­ச­கர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்­துள்­ளது," என்­றார் அவர்.

மேலும் அவர் தமது உரை­யில், "2020 டிசம்­ப­ரில் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து, சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் இந்­தத் தொண்­டூ­ழிய தொழில் ஆலோ­ச­கர்­கள் முன்­மு­யற்­சி­யின் ஒரு பகு­தி­யாக, இது­வரை 3,000க்கும் மேற்­பட்ட நபர்­கள் தொழில் நிகழ்­வு­கள் மற்­றும் ஆலோ­சனை அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ள­னர்.

"இந்த முயற்­சி­யின் மூலம் வழங்­கப்­படும் மனி­த­வ­ளத் தொடர்பு, ஊக்­கு­விப்பு ஒரு நல்ல மாற்­றத்தை உரு­வாக்கி இருக்­கிறது, இனி­மே­லும் அது தொட­ரும் என நான் நம்­பு­கி­றேன்" என்று டாக்­டர் டான் கூறி­னார்.

தொண்­டூ­ழிய ஆலோ­ச­கர்­

க­ளில் ஒரு­வ­ரான கே. தன­லட்­சுமி, 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சுகா­தா­ரத் துறை­யில் பணி­புரிகி­றார். "மன­திற்கு நிறை­வான தொழி­லைக் கண்­டு­பி­டிக்க விரும்­பு­வர்­க­ளுக்கு உத­வு­வ­தில் எனக்கு மன­நி­றைவு கிடைக்­கிறது," என்­றார் அவர்.

செய்தி: காயத்­திரி காந்தி