ஒளி வெள்ளத்தில் மிளிரும் மார்சிலிங் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம்

ஒளி வெள்ளத்தில் மிளிரும் மார்சிலிங் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம்

2 mins read
084661f9-116c-4d42-bcc1-652e436289d5
தீபாவளியை முன்னிட்டு மார்சிலிங் ரைஸ் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம் ஒளியூட்டப்பட்டுள்ளது. படங்கள்: ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம் -
multi-img1 of 2

காயத்­திரி காந்தி

மார்­சி­லிங் ரைசில் அமைந்­துள்ள ஸ்ரீ சிவ­கி­ருஷ்ணா ஆல­ய­மும் அதன் அரு­கில் உள்ள மார்­சி­லிங் சந்­தை­யும் தீபா­வ­ளியை முன்­னிட்டு இம்­மா­தம் 15ஆம் தேதி முதல் வண்ண விளக்­கு­க­ளின் ஒளி வெள்­ளத்­தில் மிளிர்­கின்­றன.

மார்­சி­லிங் வணி­கர்­கள் சங்­கம், அடித்­தள அமைப்­பு­கள், மார்­சி­லிங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு ஆகி­யவை இணைந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கண்­க­வர் ஒளி­யூட்­டிற்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

மனி­த­வள, தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முக­மது கடந்த சனிக்­கிழமை மாலை கோயி­லில் மின்­வி­ளக்­கு­க­ளை­யும் பன்­னோக்கு மண்­ட­பத்­தில் பாரம்­ப­ரிய தீபத்­தை­யும் ஏற்­றி­வைத்து ஒளி­யூட்டை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்­தார். பின்­னர் மார்­சி­லிங் சந்­தைக்­குச் சென்று அங்­குள்ள விளக்­கு­களுக்கு ஒளி­யூட்­டி­னார்.

"கடந்த ஆண்டு புதி­தா­கத் திறக்­கப்­பட்ட நான்கு மாடி இணைப்­புக் கட்­ட­டம், இந்து சமூ­கத்­தின் தேவை­களை நிறை­வேற்­றும் வகை­யில் பல­வி­த­மான நிகழ்ச்­சி­களை நடத்தி சிறப்­பா­கச் சேவை செய்து வரு­கிறது," என்­றார் அவர்.

நிகழ்ச்சியில், ஆலய நட­னக் குழு­வி­ன­ரின் பாரம்­ப­ரிய நடன நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.

"இந்த ஆண்டு நவம்­பர் முதல் ஆல­யத்­தின் 60ஆம் ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்­டங்­கள் தொடங்­க­ இ­ருக்­கின்­றன. அதன் முன்­னோட்­ட­மாக தீபா­வ­ளிக்கு இந்த ஒளி­யூட்டை ஏற்­பாடு செய்­தி­ருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது," என்று கூறி­னார் ஆல­ய நிர்வாகக் குழுத் தலை­வர் த. சுரேஷ் குமார்.

வெவ்­வேறு சம­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் குறிப்­பிட்ட ஒரு சமூ­கத்­தின் கொண்­டாட்­டங்­களில் இணை­யும் இத்தகைய போக்கு, சமூக நல்­லி­ணக்­கத்­தைப் பேணும் நாடாக சிங்கப்பூர் இருப்­ப­தைப் பறை­சாற்­று­கிறது என்­றார் அவர்.