தொடக்க வீரர்கள் ஓட்டம் குவிப்பர் என எதிர்பார்ப்பு

தொடக்க வீரர்கள் ஓட்டம் குவிப்பர் என எதிர்பார்ப்பு

2 mins read

டி20: நெதர்லாந்துடன் இந்தியா இன்று மோதல்

சிட்னி: உல­கக் கிண்ண டி20 கிரிக்­கெட் தொட­ரில் பர­ப­ரப்­பு­மிக்க ஆட்­டத்­தில் பாகிஸ்­தானை வீழ்த்­திய இந்­திய அணிக்கு, நெதர்­லாந்­து­ட­னான இன்­றைய ஆட்­டம் பெரும் சவா­லாக இருக்­காது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வலு­வான இந்­தி­யப் பந்­த­டிப்பு வரிசை நெதர்­லாந்­துப் பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கா­வி­டி­னும் பெரும் நெருக்­கடி அளிக்­கக்­கூ­டும்.

அதே நேரத்­தில், நேற்று இங்­கி­லாந்தை அயர்­லாந்து அணி வீழ்த்­தி­யது­போல, கிரிக்­கெட்­டில் எது வேண்டு­மா­னா­லும் நடக்­க­லாம் என்­ப­தால் இந்­திய அணி மெத்­த­ன­மா­க­வும் இருந்­து­வி­ட­லா­காது.

அணித்­த­லை­வர் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சூர்­ய­கு­மார் யாதவ் ஆகிய முன்­வ­ரி­சைப் பந்­த­டிப்­பா­ளர்­கள் ஓட்­டம் குவிக்க இன்­றைய ஆட்­டம் நல்­ல­தொரு வாய்ப்பு.

அடுத்­த­தாக தென்­னாப்­பி­ரிக்க அணி­யு­டன் மோத வேண்­டி­யுள்­ள­தால், அதற்­கு­முன் இன்­றைய போட்­டி­யில் சொல்­லிக்­கொள்­ளும்­படி ஓட்­டம் குவித்து அவர்­கள் தங்­களை நன்கு ஆயத்­தப்­படுத்­திக்­கொள்­வர் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

நெதர்லாந்துப் பந்துவீச்சாளர்கள் தகுதிச்சுற்றிலும் பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 'சூப்பர் 12' சுற்று ஆட்டத்திலும் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டனர்.

ஆனால், சிட்னி ஆடு­க­ளத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு எதி­ராக நியூ­சி­லாந்து 200 ஓட்­டங்­க­ளைக் குவித்­த­தா­லும் இந்­திய அணி­யின் வலு­வான பந்­த­டிப்பு வரி­சை­யா­லும் இன்­றைய போட்டி அவர்­க­ளுக்கு எளி­தாக இராது.

பூவா தலையாவில் வென்றால் பெரும்பாலும் இந்திய அணி முதலில் பந்தடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத­னி­டையே, பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டி­யில் அதே பதி­னொரு வீரர்­களே இன்­றும் கள­மி­றங்­கு­வர் என்று இந்­திய அணி­யின் பந்­து­வீச்­சுப் பயிற்று­விப்­பா­ளர் பரஸ் மம்ப்ரே தெரி­வித்­து­இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இறுதியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஹார்திக் பாண்டியா தேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்­தப் போட்­டி­யில் விராத் கோஹ்லி 73 ஓட்­டங்­க­ளைக் குவிக்­கும் பட்­சத்­தில் டி20 உல­கக் கிண்­ணத்­தில் 1,000 ஓட்­டங்­க­ளைக் கடந்த 2வது வீரர் என்ற பெரு­மை­யைப் பெறு­வார். இதற்குமுன் இலங்கையின் மகேலா ஜெயவர்தனே அச்சாதனையைப் புரிந்துள்ளார்.

இன்­றைய ஆட்­டம் சிங்­கப்­பூர் நேரப்­படி பிற்­ப­கல் 3 மணிக்குத் தொடங்­கும்.

இன்று நடக்கவுள்ள மற்ற இரண்டாம் பிரிவு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா- பங்ளாதேஷ், பாகிஸ்தான்-ஸிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.