தொடரும் இந்தியாவின் வெற்றிப் பயணம்

தொடரும் இந்தியாவின் வெற்றிப் பயணம்

2 mins read
b190c030-baeb-4c91-bece-17fb137b8565
ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சால் வெளியேற்றப்படும் நெதர்லாந்தின் மேக்ஸ் ஓ' டவுட் (இடது). 'சூப்பர்-12' சுற்றில் தனது முதல் இரு ஆட்டங்களிலும் வென்றுள்ளது இந்தியா. படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆண்­கள் டி20 கிரிக்­கெட் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் 'சூப்­பர்-12' சுற்­றில் தனது இரண்­டாம் ஆட்­டத்­தி­லும் வென்­றுள்­ளது இந்­தியா. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் நடை­பெற்ற ஆட்­டத்­தில் 56 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் இந்­தியா, நெதர்­லாந்தை வென்­றது.

முத­லில் பந்­த­டித்த இந்­தியா இரண்டு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 179 ஓட்­டங்­களை எடுத்­தது. அதற்­குப் பிறகு நெதர்­லாந்து ஒன்பது விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 123 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.

இந்த சூப்­பர் 12 இரண்­டாம் பிரிவு ஆட்­டத்­தில் 62 ஓட்­டங்­களை எடுத்து அசத்­தி­னார் இந்­திய நட்­சத்­தி­ரம் விராத் கோஹ்லி. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரா­ன முந்தைய ஆட்டத்திலும் சிறப்­பாக ஆடி இந்­தியா வெல்­வ­தற்கு கோஹ்லி முக்­கி­யக் கார­ண­மாக இருந்­தார்.

இந்த ஆட்­டத்­தில் இந்­திய அணித் தலை­வர் ரோஹித் சர்­மா­ 53 ஓட்­டங்­களை எடுத்து சிறப்­பாக ஆடி­னார். 51 ஓட்­டங்­களை எடுத்­து கவனத்தைத் தனது பக்கம் ஈர்த்தார் சூர்­ய­கு­மார் யாதவ்.

ஆட்­டத்­தின் பாதிக் கட்­டத்­தில் ஒரு விக்­கெட் இழப்­பிற்கு 67 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தி­ருந்­தது இந்­தியா. எனி­னும், சூர்யா கள­மிறங்­கிய பிறகு நிலவரம் மாறத் தொடங்கியது.

அதற்­குப் பின்­னர் கோஹ்­லி­யின் அபார விளை­யாட்­டை­யும் நெதர்­லாந்­தால் சமா­ளிக்க முடி­ய­வில்லை.

இந்­தியப் பந்துவீச்சு விரர் புவ­னேஸ்­வர் குமார், மூன்று ஓவர்­களை வீசி ஒன்­பது ஓட்­டங்­களை விட்டுக்­கொடுத்து இரண்டு விக்­கெட்­டு­களை வெளி­யேற்­றி­னார். மேலும், அர்ஷ்­தீப் சிங், ரவிச்­சந்­தி­ரன் அஷ்­வின் ஆகிய இரு­வ­ரும் ஆளுக்கு இரண்டு விக்­கெட்­டு­களை வெளி­யேற்­றி­னர்.

'சூப்­பர்-12' இரண்­டாம் பிரி­வில் தற்­போது முத­லி­டம் வகிக்­கிறது இந்­தியா. பிரி­வில் தனது முதல் இரு ஆட்­டங்­க­ளி­லும் தோல்­வி­யடைந்­துள்ள நெதர்­லாந்து கடைசி இடத்­தில் உள்­ளது.

நெதர்­லாந்து தனது அடுத்த ஆட்­டத்­தில் பாகிஸ்­தா­னு­டன் மோது­கிறது. அடுத்த ஆட்­டத்­தில் இந்தியா, தென்­னாப்­பி­ரிக்­கா­வைச் சந்­திக்­கிறது.

'சூப்­பர்-12' இரண்­டாம் பிரிவில் முன்­ன­தாக பங்­ளா­தேஷை 104 ஓட்­டங்­களில் விழ்த்­தி­யது தென்­னாப்­பி­ரிக்கா. அந்த ஆட்­டத்­தில் தென்­னாப்­பி­ரிக்­கா­வின் ரைலீ ரொசூ 109 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார்.

இந்த ஆண்­டின் ஆண்­கள் டி20 உல­கக் கிண்­ணத்­தில் முதல் செஞ்­சு­ரியை அடித்­தி­ருப்­ப­வர் ரொசூ. அவர் 56 பந்துகளில் 109 ஓட்­டங்­களை எடுத்­தார்.

ஐந்து விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 205 ஓட்­டங்­களை எடுத்­தது முத­லில் பந்­த­டித்த தென்­னாப்­பி­ரிக்கா. இவ்­வாண்டு டி20 போட்­டி­யில் இது­வரை ஓர் ஆட்­டத்­தில் தென்­னாப்­பி­ரிக்­கா­தான் ஆக அதிக ஓட்­டங்­களைக் குவித்­தி­ருக்­கிறது.

பங்­ளா­தே­ஷுக்­கான வெற்றி இலக்கு 206 ஓட்­டங்­க­ளாக இருந்­தது. ஆனால், 16.3 ஓவர்­களில் தனது எல்லா விக்­கெட்­டு­க­ளை­யும் இழந்த பங்­ளா­தேஷ், 101 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.