பாகிஸ்தானுக்குத் தொடரும் துயரம்

பாகிஸ்தானுக்குத் தொடரும் துயரம்

1 mins read
19d43b8e-e878-4d2f-824a-2e23c33e5613
டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தங்களின் வெற்றியைக் கொண்டாடும் ஸிம்பாப்வே வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

பெர்த்: ஆண்­கள் டி20 கிரிக்­கெட் உல­கக் கிண்­ணத் தொட­ரில் எதிர்­பாரா வகை­யில் பாகிஸ்­தானை வென்­றுள்­ளது ஸிம்­பாப்வே. இந்த விறு­வி­றுப்­பான 'சூப்­பர்-12' சுற்று இரண்­டாம் பிரிவு ஆட்­டத்­தில் ஸிம்­பாப்வே ஓர் ஓட்ட வித்­தி­யா­சத்­தில் வென்­றது.

முத­லில் பந்­த­டித்த ஸிம்­பாப்வே எட்டு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 130 ஓட்­டங்­களை எடுத்­தது. ஆட்­டத்­தில் வெல்ல பாகிஸ்­தான் 131 ஓட்­டங்­களை எடுக்­க­வேண்­டி­யிருந்தது.

எனி­னும், எட்டு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 129 ஓட்­டங்­களை எடுத்­தது பாகிஸ்­தான். 'சூப்­பர்-12' சுற்­றில் தனது முதல் இரு ஆட்­டங்­களி­லும் அது தோல்­வி­ய­டைந்­துள்ளது.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முதல் ஆட்­டத்­தில் வெற்­றி­பெ­றும் நிலை­யி­ல் இருந்த பாகிஸ்தான் கடைசி சில பந்­து­களில் கோட்டை விட்டது.

ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான ஆட்­டத்­தில் வெல்ல கடைசி பந்­தில் பாகிஸ்­தா­னுக்கு மூன்று ஓட்­டங்­கள் தேவைப்­பட்­டன. எனி­னும், அதன் வீரர் ஷஹீன் அஃப்ரி­டி­யால் ஓர் ஓட்­டத்தை மட்­டுமே எடுக்க முடிந்­தது.

டி20 உல­கக் கிண்­ணத்­தில் முதன்­மு­றை­யாக முதல் சுற்­றுக்­குப் பிறகு வரும் ஓர் ஆட்­டத்­தில் வெற்றி­கண்­டுள்­ளது ஸிம்­பாப்வே. இதன் பந்து வீச்­சா­ளர்­க­ளின் அபார விளை­யாட்­டுக்கு பாகிஸ்­தான் வீரர்­க­ளால் ஈடு­கொ­டுக்­க­மு­டி­ய­வில்லை.

'சூப்­பர்-12' சுற்று இரண்­டாம் பிரி­வில் மூன்றாம் இடத்தை வகிக்­கிறது ஸிம்­பாப்வே. முத­லி­டத்­தில் இந்­தி­யா­வும் இரண்­டாம் இடத்­தில் தென்­னாப்­பி­ரிக்­கா­வும் உள்­ளன. ஐந்­தாம் இடத்­தில் இருக்கிறது பாகிஸ்­தான்.

இவ்வாண்டின் டி20 கிண்­ணத்தை வெல்­லும் அதன் இலக்­கில் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.