பலனடைந்தோர் பகிர்வு

பலனடைந்தோர் பகிர்வு

1 mins read

நுண்­ணு­யிரி- மணல் நீர் வடி­கட்டி நிறு­வப்­பட்ட பிறகு மருத்­து­வச் செலவு பெரி­தும் குறைந்­துள்­ள­தா­கக் கூறி­னார் சோண்ட்லே கிரா­ம­வா­சி­யான மோனி ஹாங்.

இவ­ருக்கு 8 வயது மக­னும் 3 வயது மகளும் உண்டு. கண­வ­ரு­டன் வேளாண்மை மூலம் மாதம் 75 டாலர் வரு­வாய் ஈட்­டும் இவ­ரது குடும்­பம், குளத்து நீர், கிணற்று நீரோடு மழை நீரை­யும் பயன்­படுத்­திய நிலை­யில் வாந்தி, வயிற்­றுப்­போக்கு, கடும் வயிற்­று­வலி போன்ற உடல் உபா­தை­க­ளால் அடிக்­கடி அவ­திப்­பட்­டது.

மாதா­மா­தம் மருத்­து­வச் செல­வுக்கு 25 டாலர் வரை தேவைப்­பட்­டது என்­றும் இந்த வடி­கட்டி மூலம் குடிக்­க­வும் சமைக்­க­வும் சுத்­த­மான நீரைப் பயன்­ப­டுத்­து­வ­தால் ஆரோக்­கி­யம் மேம்­பட்­டுள்­ள­தா­க­வும் மோனி கூறி­னார்.

மற்றொரு கிராமவாசியான சொயென் தெங் எனும் 62 வயது மாது, எட்­டுப் பேர் கொண்ட குடும்­பத்­தில் சுத்­த­மான குடி­நீ­ருக்­காக மாதம் 60 டாலர் செல­வில் தண்­ணீர் கேன்­களை வாங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

"நீரைக் குறைவாகவே பயன்­படுத்திவந்தோம். இப்போது வடி­கட்டி மூலம் தூய நீர் இல­வ­ச­மா­கக் கிடைக்கிறது.

"தாரா­ள­மாக நீரை அருந்­த­வும் பயன்­ப­டுத்­த­வும் முடி­கிறது," என்­று இவர் கூறினார்.