சிங்கப்பூரிலிருந்து ஒன்பது எஸ்ஐஎஃப் தொண்டூழியர்கள் ஐந்து நாள் தொண்டூழியப் பயணமாக கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிகளை உருவாக்கியதோடு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைச் சுகாதாரப் பயிற்சியும் அளித்தனர்.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சுத்தமாகக் கைகழுவும் முறையும் பற்பசை பயன்படுத்தி சரியாகப் பல்துலக்கும் முறையும் கற்பிக்கப்பட்டது. வீட்டிலும் அவர்கள் இவற்றைத் தொடர ஏதுவாக பற்பசை, பல்துலக்கி, மறுசுழற்சி மூலம் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம், கைச் சுத்திகரிப்பான் போன்ற பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
இது மிகவும் பலனுள்ள திட்டம் என்று கூறிய ஆசிரியர் சோசி தாங், மாணவர்கள் சிலர் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் இவற்றைக் கற்றுத்தருவதாகச் சொன்னார்.
கம்போடிய கிராமப்புற மக்களின் ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயல்வோம் என்று கூறினார் எஸ்ஐஎஃப் ஆளுநர் லியன் வீ சியோவ்.
'வாட்டர் பாஃர் கம்போடியா' அறக்கட்டளை இயக்குநர் மஸ்சிமோ மையோ, "பிள்ளைகள் ஆரோக்கியமாய் நன்கு படித்து வாழ்வில் முன்னேற இம்முயற்சிகள் அடித்தளமாய் அமையும்," என்றார்.
படங்கள்: இணையம்,
மோனலிசா, எஸ்ஐஎஃப்,
வாட்டர் ஃபார் கம்போடியா அறக்கட்டளை.

