மரபும் ஓவியமும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் பார்வை

மரபும் ஓவியமும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் பார்வை

2 mins read
8a7ddc5f-df4e-46cd-be78-d59b7606483e
டிராட்ஸ்கி மருதின் ஓவியங்கள் மரபை எடுத்துரைக்கின்றன. படங்கள்: டிராட்ஸ்கி மருது -
multi-img1 of 2

ஓவி­யங்­க­ளால் நீங்­கள் முதன் முத­லில் ஈர்க்­கப்­பட்ட தரு­ணம் நினை­வி­ருக்­கி­றதா?

நான் பிறந்து வளர்ந்­தது மதுரை. சிறு வய­தில் என் அம்மா மீனாட்சி அம்­மன் கோவி­லுக்கு அழைத்­துச் செல்­லும்­போது அங்­குள்ள சிற்­பங்­ க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றேன். குறிப்­பாக, அழ­கர் கோவில் சிற்­பங்­கள். மதுரை சித்­தி­ரைத் திரு­வி­ழா­வில் கிரா­மி­யக் கலை­ஞர்­க­ளின் ஆட்­ட­மும் பாட்­ட­மும் என்­னைக் கவர்ந்­தன. நாயக்­கர் காலத்து ஓவி­யம் ஒன்று மதுரை பொற்­றா­ம­ரைக்­ குளத்­தைச் சுற்றி இருந்­தது. சிறு வய­தில் அதைக் கடந்து செல்­லும்­போ­தெல்­லாம் நிமிர்ந்து பார்ப்­பேன். விவ­ர­மில்­லாத அரசு அதி­கா­ரி­யால் அதை நாம் இன்று இழந்­து­விட்­டோம்.

என் தந்தை எனக்கு வாங்­கித்­தந்த படங்­கள் நிறைந்த புத்­த­கங்­கள் நினை­வி­ருக்­கிறது.

யுலி­ஸிஸ் (Ulysses), சிந்­து­பாத் போன்ற கதை­களை நான் ரே ஹாரி­யின் (Ray Harryhausen) அனி­மே­ஷன் திரைப்­ப­டங்­களில் பார்த்­தி­ருக்­கி­றேன். சைக்­ளோப்ஸ் என்­கிற ஒற்­றைக்­கண் பூதம் வரும். ஐந்து வய­தில் இவை­ய­னைத்­தும் எனக்­குள் உண்­டாக்­கிய ஆர்­வத்­தின் வழி­யில்­தான் இன்­றும் பய­ணிக்­கி­றேன்.

ஏழாம் வகுப்பு படிக்­கும்­போதே பணம் சேர்த்­து­வைத்து ஒரு கேமரா வாங்­கி­விட்­டேன். புகைப்­ப­டங்­கள் எடுப்­ப­தில் தனி ஆர்­வம் இருந்­தது. ஓவி­யங்­களும் வரை­வேன். பிறகு சினிமா வரைகலை துறை­க­ளி­லும் இயங்­கி­னேன். இவை அனைத்­துமே தனித்­த­னித் துறை­க­ளாக இருந்­தன. மின்னிலக்க புரட்சி வந்து அனைத்­தை­யும் ஒன்­றாக்­கி­விட்­டது.

தமி­ழில் மர­பு­சார்ந்த கதை­கள் கேலிச்சித்திர நூல்களாக புத்­த­கங்­க­ளாக வெளி­வர வாய்ப்­புள்­ளதா?

தமிழ்­நாட்­டில் மட்­டும் என்­றில்லை, இந்­தியா முழு­வ­துமே காமிக்ஸ் புத்­த­கம் சிறு­வர்­க­ளுக்­கா­னது என்­னும் பொதுக் கருத்து நில­வு­கிறது. வளர்ந்­த­வர்­கள் காமிக்ஸ் புத்­த­கம் படித்­தால், அவர்­களை இன்­னும் வள­ரா­த­வர்­கள் என்று நினைக்­கும் சூழல் இங்­குண்டு.

இதுவே தமி­ழில் காமிக்ஸ் வெளி­யா­வ­தற்­கான மிகப் பெரி­ய தடை­யாக உள்­ளது. வார்த்­தை­களைப் படிப்­பது போலவே ஒரு சித்­தி­ரத்தை எவ்­வாறு படிப்­பது, எப்­படி அணு­கு­வது என்ற பயிற்சி தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் பாடத்­திட்­டத்­தில் ஒரு போதும் இருந்­த­தில்லை.

நல்ல சித்­தி­ரங்­க­ளைக் கொண்ட பாடப் புத்­த­கங்­க­ளும்­கூட இங்­கி­ருந்­த­தில்லை.

உல­கம் முழு­தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்­தை­க­ளுக்­கான பாடத் திட்­டத்தை வகுக்­கும் பணி­யின்­போது, ஐரோப்­பிய நாடு­க­ளின் பாடப் புத்­த­கங்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றேன். அவற்­றில் சித்­தி­ரங்­க­ளுக்­குத்­தான் முத­லி­டம் இருக்­கிறது.

தமிழ்ப் பாட நூல்கள் அனைத்­தும் சித்­தி­ரங்­க­ளு­டன் இருக்க வேண்­டும் என்­ப­தைப் பாடத் திட்ட ஆலோ­ச­னைக் குழு­விற்கு நாங்­கள் வலி­யு­றுத்தி வரு­கி­றோம்.

பிரெஞ்சு மக்­க­ளை­யும் ஜப்­பா­னிய மக்­க­ளை­யும் ஏன் காமிக்ஸ் புத்­த­கங்­க­ளுக்கு அடிமை எனச் சொல்­கி­றேன் என்­றால், காட்சி ஊட­கத்­தில் தேர்ச்­சி­பெற்ற சமூ­க­மாக இருக்­கி­றார்­கள். உல­கம் முழு­தும் வளர்ச்சி பெற்ற சமூ­க­மா­னது மொழி­யை­யும் தாண்டி, சொற்­களே அற்ற காண்­பி­யல் மொழி­யில்­தான் உரை­யா­டு­கிறது. இனி­மேல் அடிப்­ப­டை­யில் தக­வல் பரி­மாற்­றம் இவ்­வாறே நிக­ழும்.

- நன்றி: அரூ இணைய இதழ்