சிங்கப்பூரில் 'கண்ணான கண்ணே'

சிங்கப்பூரில் 'கண்ணான கண்ணே'

3 mins read
d10f3c4f-0fa7-4658-91cb-5f74799c8e44
இன்றைய இசை நிகழ்ச்சி நான்கு பாகங்களாக இருக்கும், ஒவ்வொன்றும் வித்தியாசமான பாணியில் இருக்கும் என்கிறார் சித் ஸ்ரீராம். -

சிங்கப்பூர் ரசிகர்களுக்கு 'All Love No Hate' கச்சேரியைப் படைக்கும் சித் ஸ்ரீராம்.

ஆ. விஷ்ணு வர்தினி

'ஆல் லவ் நோ ஹேட்' இசை கச்சேரியை இன்று நான்கு பாகங்களாக படைக்கவிருக்கிறார் சித் ஸ்ரீராம். ஒவ்வொரு பாகமும் வேறுபட்ட பாணியிலான பாடல் களையும் உணர்வுகளையும் கொண்டிருக்கும் என அவர் தெரி வித்துள்ளார்.

ஈராண்டுகளாக ஒத்திவைக்கப் பட்ட இக்கச்சேரி இன்று அரங்கம் நிறைந்த மக்களுடன், தி ஸ்டார் தியேட்டரில் நிகழவுள்ளது.

மூன்று வய­தி­லி­ருந்தே கர்­நா­டக இசை பயின்று வந்த சித் ஸ்ரீராம், இசைப்­பு­யல் ஏ. ஆர். ரஹ்­மா­னின் 'அடியே' பாட­லின் ­மூ­லம் 2013ஆம் ஆண்­டில் திரைப்படத்­ து­றை­யில் காலடி எடுத்து வைத்­தார்.

இசை குடும்­பத்தைச் சேர்ந்த அவர், சென்­னை­யில் பிறந்­தி­ருந்­தா­லும் அமெ­ரிக்­கா­வில் வளர்ந்து, கர்­நா­டக இசை ஆசிரியரான தனது தாயார் லதா ஸ்ரீராமிடம் பயிற்சி பெற்­றார். கடந்த பத்­தாண்டு­ களாக, தெலுங்கு, மலை­யா­ளம் என பல்­வேறு இந்­திய மொழி­க­ளி­லும் திரை­யிசை பாடல்­கள் பாடி­யுள்­ளார் அவர்.

இவ்­வாண்டு, இந்தி, மராத்தி திரை­யிசை துறை­களில் சித் ஸ்ரீராம் அறி­மு­க­மா­கி­னார்.

கூடிய விரை­வில் அவரை திரை­யி­லும் காண­லாம் என பல ஊட­கங்­கள் கணித்து வந்­ததை மறுத்த அவர், இன்­னும் சில ஆண்­டு­களில் நடிப்­புக் கலையை முறை­யாக கற்றுக்­கொள்­ளும் ஆர்­வம் உள்­ள­தா­க­வும் கூறி­னார்.

"ஒரு­வேளை நடிக்க தொடங்­கி­னால், இசை­யில் நான் கோலோச்­சிய அள­வுக்கு நடிப்­புக் கலை­யி­லும் சிறந்து விளங்­க­வேண்­டும் என்ற எண்­ணம் உண்டு," என்­றார் சித் ஸ்ரீராம். சிங்­கப்­பூ­ரில் மூன்­றா­வது முறை­யாக இசை கச்­சேரி படைக்­கும் சித் ஸ்ரீராம், சிங்­கப்­பூர் ரசி­கர்­க­ளின் அன்பை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக பகிர்ந்­து­கொண்­டார்.

தனது முதல் வெளி­நாட்டு இசை நிகழ்வை சிங்­கப்­பூ­ரில் படைத்­த­போது, அரங்­கம் நிறை­ய­வில்லை என்­றா­லும், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அய­ராத அன்­பும் உற்­சா­க­மும் அவர் மனதை நிறைத்­தி­ருந்­தது.

உற்­சா­கம் மிகுந்த பாடல்­க­ளை­யும், அர்த்­த­முள்ள, ஆழ­மான தருணங்­க­ளை­யும் இம்­முறை தனது இசை நிகழ்­வில் மக்­கள் எதிர்­பார்க்­க­லாம் என்­றார் சித் ஸ்ரீராம்.

மக்­கள் தொடர்­பின்றி முடங்­கிய கொவிட்-19 காலத்­தில், இசை நிகழ்­வு­க­ளின்­ மூ­லம் மக்­க­ளு­டன் இணைய முடி­ய­வில்­லையே என்ற ஏக்­கத்தை இக்­கச்­சேரி தீர்த்து வைக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

அதே சம­யம், கொவிட்-19 காலத்­தில் தனது இசை பாணியை மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்­கும் வாய்ப்­பி­ருந்­த­தாக கூறிய சித் ஸ்ரீராம், கர்­நா­டக இசை­க் கலைஞராகவும் திரை­யிசை கலை­ஞ­ரா­க­வும் தனது அடை­யா­ளத்­தை அது பிர­தி­ப­லித்­த­தாகக் தெரி­வித்­தார்.

"புல்­லாங்­கு­ழல் இசைக் கலை­ஞர் டி. ஆர். மகா­லிங்­கத்­தின் படைப்­பு­களில் அவர் மௌனங்­களையும் இடை­வெ­ளி­யையும் கையா­ளும் விதம் என்னை மிக கவர்ந்­தது. மௌனத்­தையே ஓர் இசைக் ­க­ரு­வி­யாக பயன்­ப­டுத்­தும் அத்­தகைய உத்­தியைக் கையா­ளும் ஆர்­வ­முள்­ளது. அதை தவிர்த்து, வாழ்­வில் பார்க்­கும், கேட்­கும் அனைத்­துமே எனது இசைக்கு ஊட்­ட­ம­ளிப்­பவை," என்­றார் அவர்.

ஏறக்­கு­றைய பத்­தாண்­டு­க­ளாக இசைத்­து­றை­யில் பய­ணித்து வந்து உள்­ளார் சித் ஸ்ரீராம். இரு­ப­து­களில், ஆங்­கில இசை­யின் பக்­கம் ஈர்க்­கப்­பட்­டி­ருந்த அவரை ஏ. ஆர். ரஹ்­மா­னின் ஒரு மின்­னஞ்­சல் தன்னை திசை திருப்­பி­யது போல, பல்­வேறு எதிர்­பாரா வாய்ப்­பு­கள் சித் ஸ்ரீராமை நாடி வந்­தன.

தனது இசை­யும் குர­லும் உணர்­வும் உல­க­ளா­விய மக்­க­ளி­டத்­தில் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வல்லது என்ற பொறுப்­பு­ணர்வை இப்­ப­ய­ணம் தனக்­குத் தந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

இன்னும் சில ஆண்டுகளில், வெவ்வேறு கலைகளின் பக்கம் தனது கவனம் திரும்பலாம் என கூறினார் சித் ஸ்ரீராம். அடுத்த ஆண்டில், சித் ஸ்ரீராமின் ஆங்கில இசைப் படைப்புகளை மக்கள் எதிர் நோக்கலாம்.