கத்தார் உலகக் கிண்ணம் தொடர்பில் தொடரும் சர்ச்சை

கத்தார் உலகக் கிண்ணம் தொடர்பில் தொடரும் சர்ச்சை

1 mins read

தோஹா: இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டியை ஏற்று நடத்­தும் பொறுப்பு கத்­தா­ரி­டம் வழங்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது என்று ஜெர்­ம­னி­யின் முன்­னாள் அணித் தலை­வர் ஃபிலிப் லாம் கூறி­யுள்­ளார்.

"உல­கக் கிண்­ணப் போட்­டியை ஏற்று நடத்­தும் பொறுப்பை கத்­தா­ரி­டம் வழங்­கி­யது ஒரு தவறு," என்று ஜெர்­ம­னி­யின் 'டி ஸீட்' செய்­தித்­தா­ளில் எழுத்து வடி­வில் கருத்­து­க­ளைத் தெரி­வித்­தார் லாம். "போட்டி அங்கு நடை­பெ­றக்­கூடாது," என்­றும் அவர் சொன்னார்.

மனித உரிமை விவ­கா­ரங்­கள், ஓரி­னக் காத­லர்­க­ளுக்­கான உரி­மை­கள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் கத்­தா­ரில் இருக்கும் சட்­டங்­களின் தொடர்­பில் சர்ச்சை இருந்து வந்­துள்­ளது.

அத­னால் உல­கக் கிண்­ணப் போட்­டி அந்­நாட்­டில் நடத்­தப்­ப­டு­வ­தை எதிர்த்து அணி­கள் மட்­டு­மின்றி விளை­யாட்­டா­ளர்­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் போர்ச்­சு­கல் நட்­சத்­தி­ரம் புரூனோ ஃபெர்னாண்­டசும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

கத்­தா­ரில் விளை­யாட்­ட­ரங்­கு­களைக் கட்­டும் பணி­யில் ஈடு­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­களில் சிலர் மர­ண­ம­டைந்­த­னர். அது உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு கத்­தா­ரில் போட்­டியை நடத்­து­வது சரி­தானா என்று ஃபெர்காண்­டஸ் கேள்வி எழுப்பி­யுள்­ளார்.