எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் வியர்த்து, சோர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியம் அல்ல என்று உடலுறுதிப் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலுறுதியுடன் இருக்க தொடர்ந்து விளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். பலதரப்பட்ட பயிற்சிகளைச் செய்வது முக்கியம்.
தசைகளுக்கு ஓய்வு கொடுப்பது உறுதிப்படுத்த வேண்டும். முறையான சத்துணவு இருக்க வேண்டும் என்று பயிற்றுவிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடுமையான உடற்பயிற்சிக்கு முன்பு உடலை அதற்குத் தயார்ப் படுத்த வேண்டும். அதைவிடுத்து முன் பயிற்சிகள் இல்லாமல் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும்.
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் பொதுத் துறை ஊழியரான 49 வயது சோங் வான் யியங், கடந்த ஆண்டுகளில் பல்வேறு காயங்களை அடைந்துள்ளார்.
அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டை வலியால் அவதியுற்றார்.
தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை வழக்க நிலைக்குக் கொண்டு வருவதற்காக ‘டிரைபாடி’ உடலுறுதி நிலையத்தில் சோங், துடிப்பான மீட்பு உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அதன் பின்னர் விருப்பமான தீவிரப் பயிற்சியில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார்.
முதுகெலும்பிற்கான உடலை வளைக்கும் உடற்பயிற்சி, கால் முட்டியை மடக்கிச் செய்யும் உடற் பயிற்சி, தோள்பட்டையை இலகுவாக்கும் பயிற்சி போன்றவற்றில் குறைந்தது ஒரு நிமிடம் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதிலும் வியர்க்கிறது. ஆனால் வித்தியாசமான உடற்பயிற்சி என்கிறார் சோங்.
துடிப்பான உடல் மீட்பு உடற் பயிற்சிகள் தீவிரமற்ற உடற்பயிற்சிகளை உள்ளடக்கியது.
கடுமையான உடற்பயிற்சிக்கு முன்பும் பிறகும் உடலை நிலைப் படுத்துவதற்கான பயிற்சி இது.
இதில் கனமான எடையைத் தூக்குதல், நீச்சல், ஓடுதல் ஆகியவற்றுக்கு மாற்றாக யோகா, தசை களைத் தளர்த்துவது போன்ற மிதமான உடற்பயிற்சிகள் இடம்பெற்று உள்ளன.
உடலுறுதிப் பயிற்றுவிப்பாளரான ஹான்செல் சிங், 33, கடந்த அக்டோபர் மாதம் ‘டிரைபாடி ஃபிட்னஸ்’ (Tribody Fitness) நிலையத்தில் இத்தகைய பயிற்சி களைத் தொடங்கினார். தீவிர உடற்பயிற்சிக்குத் தினமும் பலர் வருகின்றனர். ஆனால் புதியவர்கள், போதுமான ஓய்வு இல்லாமல் தீவிரப் பயிற்சியில் காயம் அடைந்து விடுவார்களோ என்பது அவரது கவலை.
கடுமையான பயிற்சிக்குப் பிறகு தசை வலுவாக வளரும். ஆனால் தசை தீவிரப் பயிற்சிக்குப் பழக வேண்டும். இதுதாட்ன துடிப்பான மீட்பு உடற் பயிற்சிக்கான நோக்கம் என்றார் திரு சிங்.
இருபதுகளில் எளிதில் மீள முடியாத அளவுக்கு உடற்பயிற்சிகளை அவர் செய்து வந்தார். தற்போது தமது வாடிக்கையாளர்கள் அதுபோன்ற முறையற்ற கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதை அவர் தடுத்து வருகிறார்.
உடலுறுதி உடற்பயிற்சியாளரான வி. துரைராஜாசிங்கம், 40, சரியான சத்துணவு, போதுமான ஓய்வு ஆகியவையும் மிக முக்கியம் என்று குறிப்பிட்டார்.
உடற்பயிற்சிக்கு முன்பு தசை, உடல் அசைவுப் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
அது தசைகளின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதாக தீவிரப் பயிற்சிக்குப் பிறகு மீண்டு வர முடியும் என்று துரை ராஜாசிங்கம் கூறுகிறார்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நெடுநேரம் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
இவர்கள் உடனடியாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது என்கிறார் அவர்.
உடலைத் தயார்ப்படுத்தும் பயிற்சிகள், தசைகளைத் தளர்த்தும் உடற்பயிற்சிகள் முதலில் செய்வது முக்கியம். தங்களின் உடல் எந்த அளவுக்குத் தாங்கும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று ‘ரைட் ஃபிட் ஜிம்’ (The Right Fit Gym) நிறுவனரான துரைராஜாசிங்கம் தெரிவிக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயிற்சி இல்லாமல் அவர் ஓய்வு எடுக்கிறார்.
திரு துரைராஜாசிங்கம், ஓய் வில்லாமல் ஒரு வாரம் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் அளவுக்கு அவரது உடலுறுதி உள்ளது. ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல. போதுமான ஓய்வு, மீண்டு வருவதற் கான நேரம் தேவை.