நவீன தொழில்நுட்ப அறிவு, சமூக ஈடுபாடு, தொண்டூழியம் என்று தன்னிறைவோடு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் திருவாட்டி ரத்னம் பெரியசாமி 85 வயதிலும் துடிப்பான செயல்பாடு

நவீன தொழில்நுட்ப அறிவு, சமூக ஈடுபாடு, தொண்டூழியம் என்று தன்னிறைவோடு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் திருவாட்டி ரத்னம் பெரியசாமி 85 வயதிலும் துடிப்பான செயல்பாடு

3 mins read
37fce667-ac37-448b-8d6f-e8292a97cbb6
-
multi-img1 of 2

எத்­தனை வயதானாலும் மனம் இருந்­தால் மகிழ்ச்­சி­யோடு பயனுள்ள வாழ்க்­கையை வாழ­லாம் என்­ப­தற்கு முன்­னு­தா­ர­ணம் 85 வயது திரு­வாட்டி ரத்­னம் பெரி­ய­சாமி.

இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு இவ­ரது கண­வர் கால­மா­கி­விட்­டார். இவ­ருக்கு ஐந்து பிள்­ளை­கள். முடிந்­த­வ­ரை­யில் யாரை­யும் சார்ந்­தி­ருக்­கக்கூடாது என நினைக்­கும் இவர் வாம்­போ­­வில் தனி­யாக வசிக்­கி­றார். கொவிட்-19 தொற்­று­நோய் பர­வல் காலத்­தில் மட்­டும் தோ பாயோ­வில் வசிக்­கும் இளைய மகன் வீட்­டில் அடிக்­கடி சென்று தங்­கி­னார்.

புதிய தொழில்­நுட்­பங்­க­ளைக் கற்­றுக்­கொள்­வது, தமது வட்­டா­ரத்­தில் வசிக்கும் முதி­யோ­ருக்கு உதவு­வது, சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, சமூக மன்­றத்­தில் தொண்­டாற்­று­வது என்று வாழ்­வின் ஒவ்­வொரு நாளை­யும் அர்த்­த­முள்­ள­தாக்­கு­கி­றார். வாம்போ வட்­டா­ரத்­தில் வசிக்­கும் மூத்த குடி­மக்­க­ளுக்­காக குரல் கொடுப்பவர்.

சாவ் அறக்­கட்­டளை மேற்­கொள்­ளும் பல்­வேறு சமூக நிகழ்ச்சிகளில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் செயல்­படும் இவர் அந்த அறக்­கட்­ட­ளை­யின் முக்­கிய முகங்­களில் ஒன்று.

வெற்றிகரமான முதுமைக்கான குழுவின் (காம்எஸ்ஏ) 'கிளப் மேட்' என்ற முதி­யோரை சமூக, விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் ஈடு­படுத்­து­வ­தற்­கான தொடக்­க­வி­ழா­வில் ஆங்­கி­லத்­தில் பேசி சிறப்­பாக அந்­நி­கழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னார் திரு­வாட்டி ரத்­னம்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாம்போ சமூக மன்­றத்­தில் நடந்த அந்­நி­கழ்ச்­சி­யில் 200க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­னர்.

அத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹெங் சீ ஹவ் உள்­பட நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற சிறப்பு விருந்­தி­னர்­களை மேடைக்கு அழைப்­ப­தி­லி­ருந்து நிகழ்ச்­சியை நம்­பிக்­கை­யோ­டும் திறம்­ப­ட­வும் நடத்­தி­னார்.

சில வாரங்­க­ளுக்­குப் பிறகு, பாங்­காக்­கில் நடந்த ஐக்­கிய நாடு­கள் சபை­யின் ஆசியா மற்­றும் பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான பொரு­ளி­யல், சமூக ஆணை­யத்­தின் கூட்­டத்­தில் பங்­கேற்க சிங்­கப்­பூரை பிர­தி­நி­தித்­துச் சென்ற சாவ் அறக்­கட்­ட­ளைக் குழு­வில் இடம்­பெற்­றார்.

அங்கு அவர் சிங்­கப்­பூர், மலேசியா, ஜப்­பான், நேப்பா­ளம், வியட்னாம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த முதி­யோ­ரு­டன் மூப்­ப­டை­தல் தொடர்­பான மாட்­ரிட் அனைத்­து­லக செயல் திட்­டத்­தின் நான்­கா­வது மறு­ஆய்வு, மதிப்­பீடு குறித்து நடை­பெற்ற ஆசிய பசி­பிக் அர­சாங்­கங்­க­ளுக்­கி­டை­யே­யான கூட்­டத்­தில் பகிர்ந்தார்.

திரு­வாட்டி ரத்­ன­மும் அவ­ரது சகாக்­களும் தங்­கள் வாழ்க்கை அனு­ப­வங்­கள், விருப்­பங்­கள், சவால்­க­ளைப் பற்றிப் பேசினர்.

திரு­வாட்டி ரத்­னம் சிங்­கப்­பூ­ரி­லும் வாம்போ வட்­டா­ரத்­தி­லும் வசிக்­கும் முதி­ய­வர்­க­ளின் சவால்­களைப் பகிர்ந்­து­கொண்­டார். மேலும், நிறு­வனங்­கள், கொள்கை வகுப்­பா­ளர்­கள், தனி­ந­பர்­களை மூத்த தலை­மு­றை­யி­ன­ரின் குரல்­க­ளைக் கேட்டு, அதற்கு ஆவன செய்ய நேரம் ஒதுக்­கு­மாறு வலி­யு­றுத்தினார்.

ஐம்­பது வய­தைக் கடந்­தோ­ரி­டம் முது­மைக் காலத்­துக்கு திட்­ட­மிட அறி­வு­றுத்­தி­னார்.

வய­தான காலத்­தில் புதிய புதிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­ப­தற்கு திரு­வாட்டி ரத்­னம் எடுத்துக்­காட்­டாக உள்­ளார். தமது 80 வயதுகளில் சாவ் அறக்­கட்­ட­ளை­யின் திரு­வாட்டி தெரேசா டானு­டன் நட்புக்கொண்ட இவர், அவ­ரு­டன் இணைந்து வாம்போ சமூக மன்­றத்­தின் தீபாவளிக் கொண்­டாட்­டம் உள்­பட பல நட­வ­டிக்­கை­களில் பங்­க­ளித்து வரு­கி­றார்.

இவர், இணை­யத்­தி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் தீவி­ர­மா­கச் செயல்­படு­ப­வர். சாவ் அறக்­கட்­ட­ளை­யின் ஃபேஸ் பக்க பிர­பலம் இவர்.

மகிழ்ச்சியான முதுமைக் காலம்

சிங்­கப்­பூர் புள்ளி விவ­ரத் துறை­யின் புள்ளிவிவரப்­படி, மக்­க­ளின் சரா­சரி ஆயுள் ­கா­லம் 83.5 ஆண்­டு­கள் வரை உயர்ந்­துள்­ளது. இது ஆண்­க­ளுக்கு 81.1, பெண்­க­ளுக்கு 85.9 ஆக­வும் உள்­ளது.

இந்த நீண்ட ஆயு­ளு­டன் நிறை­வான 100 ஆண்டு வாழ்க்­கையை வாழ முந்­திய தலை­மு­றை­யி­ட­மிருந்து மாறு­பட்டு சிந்­திக்க வேண்­டும். உற­வு­கள், சேமிப்பு, கல்வி, வேலை போன்­ற­வற்றை முறை­யாகத் திட்­ட­மி­ட­வேண்­டும்.

நீண்­ட­கா­லம் நல­மாக வாழ நோய்த் தடுப்­பும் உடல்ந­ல­மும் முக்­கி­ய­மான பங்கை வகிக்­கின்­றன.

70 வய­தில் நெட்­டோட்­டம் ஓடு­பவர்­கள், கிட்­டத்­தட்ட 81 வய­தில் எவ­ரெஸ்ட் சிக­ரத்­தில் ஏறிய யுசிச்ரோ மியூரா, சிங்­கப்­பூ­ரின் ஆக வய­தா­ன­வர்­களில் ஒரு­வ­ரும் ஆசி­யா­வின் முன்­னு­தா­ரண சமூக சேவை­யா­ளர்­களில் ஒரு­வ­ரு­மான தெரேசா சாவ் 47 வய­தில் தாதி­மைப் படிக்­கத் தொடங்­கினார்.

பின்­னர், வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உண­வும் நிதி உத­வி­யும் அளிக்­க­வும், வய­தான நோயா­ளி­க­ளுக்­கான இல்­லத்தை அமைக்­க­வும் 'ஹார்ட் டு ஹார்ட்' எனும் லாப நோக்­க­மற்ற அமைப்­பைத் தொடங்கி, 113 வய­தில் மர­ண­ம­டை­யும் வரை சேவை­யாற்­றி­னார்.

திரு­மதி சாவ் இங் யூ ஷுன், 86 வய­தில், முதி­யோ­ருக்கு பரா­ம­ரிப்பு, ஆத­ரவு, வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தன் மூல­மும் அவர்­களை சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தன் வழி­யா­க­வும் முது­மைக் காலத்தை மகிழ்ச்­சி­யா­ன­தாக்க சாவ் அறக்­கட்­ட­ளையை நிறு­வி­னார்.

துடிப்­பா­க­வும் சுதந்­தி­ர­மா­க­வும் தன்னூக்கத்தோடும் இருந்தால் சமூகத்­திற்கு பங்­களிக்க முடி­யும் என்­பதை இந்­தப் பெண்­கள் தங்­கள் வாழ்க்கை நிரூபித்துள்ளனர்.

ஓய்வு பெறும்­போது வாழ்க்கை முடிந்­து­வி­டு­வ­தில்லை, ஒரு புதிய அத்­தி­யா­யம் தொடங்­கு­கிறது.

-சூசனா கன்­கார்டோ ஹார்டிங் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சில் எழு­திய கட்­டு­ரை­யி­லி­ருந்து.