காலையில் தேநீர் குடிக்கும் பழக்கம்: பக்கவிளைவுகள் உள்ளன

காலையில் தேநீர் குடிக்கும் பழக்கம்: பக்கவிளைவுகள் உள்ளன

2 mins read

காலை­யில் எழுந்­த­வு­டன் காப்­பி­யைத் தவிர்த்து விட்டு தேநீர் குடிக்­கும் பழக்­கம் சில­ருக்கு உண்டு. ஒரு­சி­லர் பசிக்­கும்­போதெல்லாம் பசியை ஆற்ற ஒரு கோப்பை தேநீ­ரைக் குடிப்­பார்­கள். வெறும் வயிற்­றில் பால் சேர்த்த தேநீ­ரைக் குடிப்­ப­தால் உட­லில் பல பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­ம் வாய்ப்­பு­கள் உள்­ளன. அத­னால் அள­வு­டன் தேநீர் குடிப்­பது அவ­சி­யம்.

வயிற்று உப்புசம்

பால் போட்ட தேநீரை வெறும் வயிற்­றில் அள­வுக்கு அதி­க­மாக குடிக்­கும் போது, அது வயிற்று உப்­பு­சம் அல்­லது வயிற்று வீக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

இதற்கு தேயி­லை­யில் உள்ள கேஃபின் ஒரு முக்­கிய கார­ணம். பாலை­ கேஃபினுடன் சேர்க்­கும் போது இரண்­டும் ஒன்றுசேர்ந்து வாயு உற்­பத்தியை ஊக்­கு­விக்­கும்.

உடல்வறட்சியால் பல பிரச்சினைகள்

காலை­யில் தேநீர் குடித்­தால்­தான் காலைக்­க­டனை எளி­தா­கக் கழிக்க முடி­வ­தாக பலர் சொல்­வார்­கள். ஆனால் அதற்கு மாறாகவும் நடக்கும்.

ஆனால் தேயி­லை­யில் கேஃபின் போல­வே­ஃபில்­லைன் எனும் ஊக்­கி­யும் உள்­ளது.

இரண்­டும் உட­லில் தண்­ணீர் வறட்­சியை ஏற்­ப­டுத்­தும். அள­வுக்கு அதி­க­மாக தேநீரை வயிற்­றில் குடிக்­கும்­போது, உட­லில் தண்­ணீர் குறைந்து மலச்­சிக்­கல் ஏற்­ப­ட­லாம்.

உடல்­வ­றட்­சி­யால் மேற்­கா­ணப்­பட்ட மலச்­சிக்­க­லு­டன் வேறு சில சிக்­கல்­களும் ஏற்­ப­ட­லாம். அள­வுக்கு அதி­க­மான தேநீர் குடித்­து­விட்டு, போது­மான தண்­ணீர் குடிக்­கா­மல் இருந்­தால் சிறு­நீர் தொற்று, சிறு­நீ­ர­கத்­தில் கல் போன்­றவை ஏற்­படலாம்.

உட­லில் ஏற்­க­னவே நீர்ச்­சத்து குறை­வாக இருப்­ப­வர்­கள், சர்க்­கரை சேர்த்த தேநீரை வெறும் வயிற்­றில் குடிக்க வேண்­டாம்.

தலைவலி, தூக்கமின்மை

பல­ருக்கு ஒரு கோப்பை தேநீர்­தான் தலை­வ­லிக்கு மருந்து. ஆனால் அதன் அளவு மீறி­னால் அது உடல் வறட்­சிக்கு வழி­வ­குத்து, தலை­வ­லியை உண்­டாக்­கும்.

அதிக பதற்­றம் இருப்­ப­தாக உணர்­பவர்­கள் அடிக்­கடி தேநீர் குடிப்­பதை நிறுத்­தி­னால் நல்­லது. உங்­க­ளின் பதற்­ற­நி­லை­யில் தேநீ­ருக்கு ஒரு முக்­கிய பங்குண்டு. பதற்­ற­நி­லை­யின் அறி­கு­றி­களை பால் போட்ட தேநீர் தூண்­டு­வது அதற்குக் காரணம்.

மேலும், தேயி­லை­யில் உள்ள கேப்­ஃபின் தூக்க சுழற்­சி­யில் இடை­யூறை ஏற்­ப­டுத்தி, தூக்­கத்­தைத் தூரத் துரத்­தும்.

ஏற்­க­னவே தூக்­க­மின்மை பிரச்­சனை இருப்­ப­வர்­கள், பால் சேர்த்த தேநீரை வெறும் வயிற்­றில் தவிர்க்­க­வும்.

ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்

பல நோய்களுக்கு முக்­கிய கார­ண­மாக இருக்கும் ரத்த அழுத்த பிரச்­சினையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவ­சி­யம்.

உயர் இரத்த அழுத்­தம் இத­ய­நோய்க்கு இட்­டுச் செல்­லக்­கூ­டி­யது. அள­வுக்கு அதி­க­மாக தேநீர் குடிப்­ப­தற்­கும் இரத்த அழுத்த ஏற்ற இறக்­கம் ஏற்­பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்க வெறும் வயிற்­றில் தேநீர் குடிப்­ப­தைக் குறைத்துக் கொள்ள வேண்­டும்.