அனுஷா செல்வமணி
உடற்குறை யாருக்கும் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு உள்ள பிள்ளைகளுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
களுக்குச் சென்ற சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கடந்த 22 ஆண்டுகளாக தேசிய பல்கலைக்கழக
மருத்துவமனை ‘எ கிப்ட் ஆஃப் அட்வென்சர்’ எனும் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து வருகிறது.
பள்ளி விடுமுறையின்போது, உடல்
நலத்துடன் இருக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வெளிநாடு
களுக்குச் செல்வது, பள்ளி முகாம்
களில் கலந்துகொள்வது போன்ற நட
வடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், உடல் குறைபாடு உள்ள சிறுவர்களால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அவர்கள் சிறுநீரக சுத்திகரிப்புக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் பெறும் அனுபவங்களை சிறுநீரக பிரச்சினை உள்ள சிறுவர்களும் பெறவேண்டும், அவர்களும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த முகாமில் உடற்குறை உள்ள சிறுவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், அவர்களின் உடல்
நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பத்து தாதியர்கள், இதர சுகாதார பராமரிப்பாளர்கள் ஆகியோர், இந்த மூன்று நாள் முகாமில் சிறுவர் களுடன் தங்கி அவர்களைக் கவனித்துக்கொண்டனர்.
டிசம்பர் 16ஆம் தேதியிலிருந்து, 18ஆம் தேதி வரை நடந்த இந்த முகாமில், எட்டு வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்ட 50 சிறுவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
சாங்கி சிவில் சர்விஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த முகாம், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுவர்கள், சிறுநீரக நிலையத்தின் தலைவர், முனைவர் யாப் ஹுய் கிம்மால் வழிநடத்தப்பட்டது.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணங்களால் மெய்நிகர் வழியாக நடந்தேறிய இந்த முகாம், நீண்டகால காத்திருப்பிற்குப் பிறகு பங்கேற்பாளர்களை ஈர்த்ததோடு, புது விதமான அனுபவத்தையும் அவர்
களுக்கு அளித்தது,” என்றார் முனைவர் யாப் ஹுய் கிம்.
செந்தோசா தீவைச் சுற்றி நடைபெற்ற ‘அமேசிங் ரேஸ்’ பந்தயம், பலகை விளையாட்டுகள் ஆகியவை பங்கேற்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்திருந்தது.
தினமும் பயன்படுத்தப்படும் ரத்த சுத்திகரிப்பு இயந்திரமும் முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டது.
சுகாதார நிபுணர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையிலிருந்து வந்த தொண்டூழியர்கள், பங்கேற்பாளர்கள் நேரம் தவறாமல் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருந்துகளை உட்கொள்வதை கண்காணித்ததோடு, ‘பெரிட்டோனியல் டயலிசிஸ்’ செய்
வதற்கும் உதவியாக இருந்தனர்.
எட்டு ஆண்டுகளாக இந்த முகாமிற்குச் சென்றுவரும் 20 வயது சத்யா ஆனந்த், இளம் வயதிலிருந்து பெரிட்டோனியல் டயலிசிஸ் செய்து வருகிறார்.
இந்த முகாம் மூலம் தன்னைப் போன்ற இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததோடு, தங்களுக்கு இருக்கும் நோயைப் பற்றி கலந்துரையாடியதாகவும் கூறினார்.
மேலும், உடல்நலமுடன் இருக்கும் சிறுவர்கள் எப்படி முகாமில் நடந்து கொள்வார்கள் என்ற ஓர் அனுபவத்தைப் பெற்றதாகவும் அவர் பகிர்ந்தார்.
சத்யாவின் தந்தையான திரு ஆனந்த், “இந்த முகாம் மூலம், சத்தியாவை போன்ற பிள்ளைகள் பெற்றோரின் ஆதரவின்றி, தன்னிச்சையாக எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வார்கள்.
“மேலும், அன்றாடம் மற்ற பிள்ளைகள்போல இன்பமாக வெளியே செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற வாய்ப்புகள் கிட்டாத இந்த சிறுவர்களுக்கு, இதுபோன்ற முகாம், அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவத்தை அளிப்பதோடு இந்த அனுபவம் அடுத்த ஆண்டு மீண்டும் இந்த முகாம் தொடங்கும் வரை அவர்
களின் நினைவில் இருக்கும்,” என்றும் கூறினார்.
சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பெறும் ரயான் மேத்யூவும் முகாமில் பங்கேற்றார். இவருடைய இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கிறார் இந்த தொண்டூழியர்.
தொண்டூழியர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உதவியோடு சிறுவர்கள் கட்டைகளை அடுக்கி, விளையாடி மகிழ்கிறார்கள்.
மற்றவர்களுடன் இணைந்து விளையாடி மகிழ்கிறார் இந்த சிறுவன்.