குறும்படத் தயாரிப்பில் இளையர்கள் சாதனை

5 mins read
7f535a1b-2302-4744-80f7-97812592881d
-
multi-img1 of 5

கரு­ணா­நிதி துர்கா

கற்­பனை அல்­லது உண்­மைக் கதை­க­ளைப் பார்ப்­போ­ருக்கு சுவா­ர­சி­ய­மா­க­வும் ஆக்­க­பூர்­வ­மான வகை­யி­லும் கருத்­தைக் கொண்டு சேர்ப்­பவை, குறும்­ப­டங்­கள்.

அண்­மைய கால­மாக குறும்­படத் தயா­ரிப்­பில் ஆர்­வம் காட்­டும் இளை­யர்­கள் அதி­க­மா­கவே உதித்து வரு­கின்­ற­னர்.

வளர்ந்­து­வ­ரும் இந்­தக் கலைத்­து­றை­யில் கால்­ப­திக்­கும் இலக்­கோடு இருக்­கும் இளை­யர்­கள், படிப்­ப­டி­யாக அதற்­கான திறன்­களை வளர்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

இக்­க­லைத்­து­றை­யில் சாதிப்­ப­தற்­கான முக்­கிய அம்­ச­மா­னது அனு­ப­வம் என்­றா­லும் இளம் வய­தி­லேயே சாதிக்க விழைந்து அதில் சாதித்­தும் இருக்­கின்­ற­னர் பல இளை­யர்­கள். குறும்­ப­டங்­கள் மீதுள்ள ஆர்­வத்­தில் தமிழ்­மொழி மீதான ஆர்­வ­மும் சில­ருக்கு அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மருத்­துவத் தொழில்­நுட்­பத் துறை­யில் பயின்று­வ­ரும் சைலேஷ் நாதன், 19, 2020ல் இருந்து குறும்­ப­டங்­கள் தயா­ரித்து வரு­கி­றார்.

கதா­சி­ரி­ய­ரா­க­வும் இயக்­கு­நரா­க­வும் இக்­கு­றும்­ப­டங்­களில் ஈடு­பட்ட இவர், பல தமிழ் திரைப்­படங்­க­ளைக் காண்­ப­தன் மூலம் தமிழ்­மொ­ழி­யைப் பற்­றி­யும் தமிழ் கலா­சா­ரத்­தைப் பற்­றி­யும் நம்­மால் எளி­தில் கற்­றுக்­கொள்ள இய­லும் என்­றார்.

வெவ்­வேறு வட்­டார வழக்­கு­கள் பற்­றி­யும் அவற்­றின் மொழி நுணுக்­கங்­கள் பற்­றி­யும் தெரிந்து­கொள்­வ­தில் ஆர்­வம் கொள்­கிறார் சைலேஷ். 'லாஸ் ஏஞ்­ச­லஸ் லிப்ட் ஆப்' திரைப்­பட விழா­வின் இயக்­கு­நர்­கள் கண்­காட்சி போன்ற உல­க­ள­வில் நடத்­தப்­பட்ட நிகழ்ச்­சி­களில் அவ­ரது படைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

உயர்­நி­லைப் பள்­ளிப் பரு­வத்திலி­ருந்தே குறும்­ப­டம் தயா­ரிக்­கத் தொடங்­கிய கும­ர­சாமி முகேஷ் குமார், 17, 'காளி­வுட்' என்ற 'யூடி­யூப் ஒளி வழி­யைத் தொடங்கி, தன்­னு­டைய நண்­பர்­களை நடி­கர்­க­ளாக ஈடு­ப­டுத்­திக் குறும்­ப­டங்­களை இயக்கி வந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் குறும்­ப­டங்­க­ளுக்­கான பயி­ல­ரங்­கு­களும் போட்­டி­களும் இன்­னும் அதி­கம் நடை­பெ­ற­லாம் என்­றார் இவர்.

சிங்­கப்­பூ­ரின் கலைத்­து­றை­யைப் பற்றி நாளுக்கு நாள் புதி­ய­ன­வற்­றைக் கற்­றுக்­கொள்­வ­தா­க­வும் முகேஷ் கூறி­னார்.

சிறு வய­தி­லி­ருந்தே தமிழ்த் திரைப்­ப­டங்­ளைக் கண்டு வியந்த கோவிந் சுதன் ஆலா­சி­யம், 21, ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தொடர்பு, ஊட­கத்­துறை படிப்பை மேற்­கொண்­டார்.

மேலும், இரண்டு மீடி­யா­கார்ப் நிகழ்ச்­சி­க­ளுக்­குத் துணைத் தயா­ரிப்­பா­ள­ராக விளங்­கி­னார். இத்­தி­றன்­க­ளைக் கொண்டு தன் முதல் குறும்­ப­டத்­தை­யும் இயக்­கிக்­கொண்­டி­ருக்­கி­றார் சுதன்.

சிங்­கப்­பூர்த் தக­வல் சாதன மேம்­பாட்டு ஆணை­யம் இத்­துறைக்­குப் பங்­க­ளிக்க விரும்­பும் இளை­யர்­க­ளுக்கு கூடு­தல் உத­வி­களை வழங்­க­லாம் எனக் கூறி­னார் இவர்.

முழு­நே­ர­மா­கத் தக­வல் தொழில்­நுட்­பப் பொறி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் ஜானகி நாயர், 25, நடிப்­ப­தில் ஆர்­வம் கொண்­ட­வர்.

'ஒரு நாள் கூத்து', 'மேகனா', 'பௌர்­ணமி' போன்ற குறும்­ப­டங்­களில் இவர் நடித்­துள்­ளார்.

இவ­ரது தாய்­மொழி மலை­யாளம் என்­றா­லும் தமிழ்த் திரைப்­படங்­க­ளைப் பார்த்­து தமிழ்­மொ­ழி­யைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் தனக்கு அதி­க­ரித்­த­தா­கக் கூறி­னார் ஜானகி.

"அண்மைக் கால­மாக நடி­கர்­களுக்­கான தேவை­யும் புது முகங்­க­ளுக்­கான தேட­லும் அதி­கரித்­துள்­ளது என­லாம்," என்­றார் ஜானகி.

மின்­பொ­ருள் பொறி­யா­ள­ரான நட்­சத்­தி­ரம் பிரேம் குமார், 35, பல குறும்­ப­டங்­கள், பாடல் காணொ­ளி­கள், திரைப்­ப­டங்­கள் போன்­ற­வற்­றின் தயா­ரிப்­பில் ஈடு­பட்டு ஊட­கத்­து­றை­யில் சிறந்து விளங்­கு­கி­றார்.

அண்­மை­யில் தயா­ரிக்­கப்­பட்ட 'ஹேப்பி ஹோம்ஸ்' என்ற உள்­ளூர் படைப்­புக்கு ஏழு விரு­து­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதன் தயா­ரிப்பு, கேமரா வேலை, எடிட்­டிங் ஆகிய பணி­கள் இவர் மேற்­கொண்­டவை.

"வாய்ப்­பு­களை நாம்­தான் தேடிக்­கொள்ள வேண்­டும், உரு­வாக்­கிக்­கொள்ள வேண்­டும்," என்­றார் பிரேம் குமார்.

இந்த இளை­யர்­க­ளுக்கு மேம்­பட்ட படப்­பி­டிப்­புக் கரு­வி­களும் சாத­னங்­களும் இல்­லை­ என்­றா­லும் நமது கைய­டக்­கத் தொலை­பே­சி­யைக் கொண்டே ஒரு குறும்­ப­டத்­தைத் தயா­ரித்­து­வி­ட­லாம் என்­றார் இவர்.

அவ்­வாறு கைய­டக்­கத் தொலை­பே­சி­யைக்­கொண்டு ஆவ­ணப்­ப­டங்­களும் குறும்­ப­டங்­களும் தயா­ரித்து அங்­கீ­கா­ரம் பெற்ற சலீம் ஹாடி, 42, இது­வரை 27 குறும்­ப­டங்­கள் வெளி­யிட்­டுள்­ளார்.

சமூ­கப் பிரச்சினைகளைச் சார்ந்த பதி­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான தள­மாக குறும்­ப­டங்­களை இவர் காண்­கி­றார்.

அது­மட்­டு­மல்­லா­மல் தமிழ் குறும்­ப­டங்­கள் தமிழ்­மொ­ழி­யின் வளர்ச்­சிக்கு வழி­வ­குப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

"எத்­தனை சவால்­கள் எதிரே வந்­தா­லும் அவற்­றைக் கண்டு துவண்­டு­வி­டா­மல் விடா­மு­யற்­சி­யு­டன் இலக்கை நோக்­கிப் பய­ணித்­தால்­தான் கலைத்­து­றை­யில் சாதிக்க முடி­யும்," என நம் உள்­ளூர் இளம் கலை­ஞர்­க­ளுக்கு வலி­யு­றுத்த விரும்­பு­கி­றார் சலீம் ஹாடி.

உள்­ளூர் படப்­பி­டிப்­புக் குழு­வுக்கு மறு­பி­றவி தந்த 'பிறவி'

குறும்­ப­டம் தயா­ரிக்­கும் ஆசை கொண்ட ஐந்து பேர், இணைந்து 2017ஆம் ஆண்­டில் 'தோழன்' என்ற குறும்­ப­டத்தை வெளி­யிட்­ட­னர். கெ.ஜெ சிவா­ய­சுப்­ர­ம­ணி­யம், பிரி­திப் ஷங்­கர், பிரேம்­ராஜ் சந்­திரன், முகம்­மது ஃபிர்­தோஸ், க.ஹரி­பி­ர­சாத் ஆகிய அந்த ஐவ­ரும் ஐந்து வரு­டங்­க­ளுக்­குப் பிறகு 'பிறவி' என்ற படத்­தைத் தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ள­னர்.

பார்­வை­யா­ளர்­க­ளி­டத்­தில் சேர்க்க விரும்­பும் கருத்தை குறு­கிய நேரத்­தில் அழுத்­த­மாக வெளிப்­ப­டுத்­தும் ஒரு குறும்­ப­டம்­தான் 'பிறவி'.

விஷ்வா என்ற ஒரு முரட்­டுத்­த­ன­மான இளை­யர், வாழ்க்­கை­யின் தவ­றான பாதை­யில் செல்ல நேரி­டு­கிறது. அவர் எவ்­வாறு குடும்­பத்­தின் உத­வி­யோ­டும் நண்­பர்­க­ளின் உத­வி­யோ­டும் தம் குணத்தை மாற்­றிக்­கொள்­கி­றார் என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.

ஆரம்­பத்­தில் வெளி­யான 'தோழன்' குறும்­ப­டத்­தில் நடி­கராக இருந்த ஹரி­பி­ர­சாத், 23, 'பிறவி'யில் இயக்­கு­ந­ராக பொறுப்­பேற்­றுள்­ளார்.

தற்­போது பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வடி­வ­மைப்பு, ஊட­கத் துறை­யில் பட்­ட­யப் படிப்பு மேற்­கொள்­கி­றார்.

இதன் படப்­பி­டிப்பு கொண்­டு­செல்­லப்­பட்ட வித­மும் இக்­குறும்­படத்­தில் இடம்­பெ­றும் காதல் கதை­யும் வழக்­கத்­தை­விட சற்று வேறு­பட்­ட­தாக இருந்­தது என ஹரி­பி­ர­சாத் கூறி­னார்.

படத்­தின் தயா­ரிப்­பின்­போது சில பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்­தாலும் எதிர்­கா­லத்­தில் அவர்­களின் படைப்­பு­கள் முன்­னேற்­றம் காணும் என உறு­தி­யா­கக் கூறி­னார் இவர். சிங்­கப்­பூ­ரில் மேலும் பல இளம் கலை­ஞர்­கள் உரு­வெ­டுப்­பர் என நம்­பிக்கை கொள்­கி­றார் ஹரி­பி­ர­சாத்.

இப்­ப­டத்­தின் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் சிவா­ய­சுப்­ர­மணி­யம், 22, சிறு வய­தி­லி­ருந்து திரைப்­ப­டங்­களின் மீதும் மேடை நாட­கங்­களின் மீதும் நாட்­டம் கொண்­ட­வர்.

2018ல் 'மீடி­யா­கார்ப்' வசந்­தத்­தின் 'குரு­பார்வை' நாட­கத் தொடரி­லும் இவர் நடித்­துள்­ளார்.

நடிப்பு, கேமரா வேலை, இயக்­கம், எடிட்­டிங், பாட­லா­சி­ரி­யர் எனப் பல­வற்­றில் அனு­ப­வம் பெற்­ற­வர் சிவா­ய­சுப்­ர­ம­ணி­யம்.

கொவிட்-19 படப்­பி­டிப்பை பாதித்­த­தால் இப்­ப­டத்­தின் தயா­ரிப்­புப் பணி­கள் சற்று தாம­த­மா­கி­யி­ருந்­தா­லும் தடை­க­ளைத் தாண்டி உரு­வாக்­கப்­பட்ட இப்­படைப்பு, பார்­வை­யா­ளர்­க­ளைப் பெரி­தும் கவ­ரும் என நம்­பிக்கை தெரி­விக்­கி­றார் சிவா­ய­சுப்­ர­ம­ணி­யம்.

ஒலிப் பொறி­யா­ள­ராக நேரலை நிகழ்ச்­சி­களில் பணி­பு­ரி­யும் பிரி­திப் ஷங்­கர், 28, இப்­ப­டத்­திற்­கான பாடல்­க­ளை­யும் பின்­னணி இசை­யை­யும் அமைத்­தார். தற்­போது அவர் மேலும் பல புதிய படைப்­பு­களில் ஈடு­பட்­டுள்­ளார்.

நமது செயல்­க­ளால் நம்­மைச் சுற்றி நடக்­கும் நிகழ்­வு­கள் எப்­படி­யெல்­லாம் மாற்­றம் காணும் என்­ப­தைப் பற்றி இப்­ப­டத்­தி­லிருந்து பார்­வை­யா­ளர்­கள் உண­ரும் வகை­யி­லும் அவர்­க­ளது மனதை நெகி­ழ­வைக்­கும் அள­விற்­கும் இப்­ப­டம் இருக்­கும் என பிரி­திப் கூறி­னார்.