'காலாழ் களரில் உலகு' சிறுகதைத் தொகுப்பு

'காலாழ் களரில் உலகு' சிறுகதைத் தொகுப்பு

1 mins read

வித்யா அரு­ணின் 'காலாழ் களரில் உலகு' சிறு­க­தைத் தொகுப்பு நவம்­பர் 26ஆம் தேதி இணை­யம் வழி­யாக அறி­மு­கம் கண்­டது. எழுத்­தா­ளர் நாஞ்­சில் நாட­னின் முன்­னு­ரை­யு­டன் வெளி­வந்­துள்ள இந்­நூ­லில் சிங்­கப்­பூ­ரைக் கள­மா­கக்­கொண்ட 12 சிறு­க­தை­கள் உள்­ளன.

அறி­வி­யல் கதை­கள், சமூகக் கதை­கள் என்று பல்­வேறு வகை­மை­களிலும் வித்யா அருண் வெற்றி­பெற்­றுள்­ள­தாக நிகழ்ச்­சி­யில் பேசிய எழுத்­தா­ளர் நாக­ரத்­தி­னம் கிருஷ்ணா பாராட்­டி­னார்.

'சென்­றி­டு­வீர் எட்­டுத் திக்­கும் கலைச்­செல்­வங்கள் யாவும் கொணர்த்­திங்கு சேர்ப்­பீர்' என்ற பார­தி­யின் வரிகளுக்கு மற்றொரு சான்­றாக இத்­தொகுப்பு இருப்­ப­தாக பன்மொழி எழுத்­தா­ள­ரும் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரு­மான மது­மிதா தன் உரை­யில் கூறி­னார்.

'கதை எனப்­ப­டு­வது' என்ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றிய திரு நாஞ்­சில் நாடன், தமி­ழில் முதல் சிறு­கதை எப்­போது எழுதப்­பட்­டது என்று தொடங்கி, உல கெங்­கி­லு­மி­ருந்து எழு­தப்­படும் தமிழ்ச் சிறு­க­தை­கள் நம்­பிக்கை அளிப்­ப­தாக சொன்­னார்.

மேலும் திருக்­கு­றள், முத்­தொள்­ளா­யி­ரம், புற­நா­னூறு, திரு­முறை போன்ற பல நூல்­க­ளி­லி­ருந்து, சிறப்­பான எடுத்­துக்­காட்­டு­க­ளோடு, அவற்­றில் சிறு­க­தைக்­கான பண்­பு­கள் காணப்­ப­டு­வ­தைச் சுட்­டி­னார்.

நூல் வேண்­டு­வோர் தொடர்பு­கொள்க திரு­மதி வித்யா அருண்: 94895848 (kavidhya@gmail.com)