கதைக்­க­ளத்­தில் செ.ப. பன்­னீர்­செல்­வம்

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் மாதாந்­தி­ரக் கதைக்­க­ளத்­தில் எழுத்­தா­ளர் செ.ப. பன்­னீர்­செல்­வம் 'நம் எழுத்­து­ல­கம்: சில பார்­வை­கள்' என்­னும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார்.

கதைக்­க­ளம் வரும் சனிக்­கிழமை, 7/1/2023 அன்று மாலை 5.00 மணிக்கு, சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தின் ஐந்­தா­வது தளத்­தில் உள்ள இமே­ஜி­னே­ஷன் அறை­யில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது. மேலும், கதைக்­க­ளத்­திற்கு வந்­தி­ருக்­கும் போட்­டிப் படைப்­பு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லு­டன் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­களும் வழங்­கப்­படும்.

பிப்­ர­வரி மாத நூல் அறி­மு­கப் போட்­டிக்கு, சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தி­லுள்ள நூல் ஒன்­றுக்கு 140 சொற்­க­ளுக்­குள் சுவை­யான அறி­மு­கத்தை எழுதி அனுப்ப வேண்­டும்.

மூன்று பிரி­வு­க­ளாக இடம்­பெறும் பிப்­ர­வரி மாத சிறு­க­தைப் போட்­டிக்கு எழு­து­வ­தற்­கான தொடக்க வரி­கள்:

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் பிரிவு: 200 முதல் 300 சொற்­க­ளுக்­குள் எழுத வேண்­டும்.

'காற்­பந்­தாட்­டம் என்­றாலே கோபப்­படும் அப்­பா­வின் முகத்­தில் அன்று உற்­சா­கம் பொங்­கி­யது.'

இளை­யர் பிரிவு: 300 முதல் 400 சொற்­க­ளுக்­குள் எழுத வேண்­டும்.

'மலர்க் குவி­ய­லுக்­குள் விழுந்து கிடப்­ப­தைப்­போல மனம் பர­வ­ச­மா­னது.'

பொதுப்­பி­ரிவு: 400 முதல் 500 சொற்­க­ளுக்­குள் எழுத வேண்­டும்.

"பொருள் சேவை வரி ஒரு விழுக்­காடு அதி­க­ரிக்­கி­ற­துக்­கா­கவா இவ்­வ­ளவு பொருள் வாங்­கி­யிருக்கே?" என்று வியப்­பு­டன் கேட்­டார்.

படைப்­பு­க­ளைக் கணி­னி­யில் அச்­சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்­னி­யல் படி­வத்­தின் வழி­யாக 27/01/2023 வெள்­ளிக்­கி­ழ­மைக்­குள் அனுப்பி வைக்­க­வும்.